Just In
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 2 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 4 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 5 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
வாகனங்களின் விலை உயராது... உத்தரவை பின் வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!
புதிய வாகனங்களின் விலையை உயர்த்தும் வகையில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்த வாகன உலகமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது. பலரின் ஷாக்கிற்கு காரணமாக அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் தற்போது பின் வாங்கியிருக்கின்றது. இதுகுறித்த முழுமையான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்பனையாகும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கான பரந்த காப்பீட்டூ திட்டம் கட்டாயம் என அறிவித்து உத்தரவிட்டது. விபத்து குறித்த ஓர் வழக்கு விசாரணையின் போதே இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் அறிவித்தது.
இதனால் புதிய வாகனங்களின் விலை பல மடங்கு உயரும் நிலை ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமே பேரதிர்ச்சியில் உறைந்தது என்றுகூட கூறலாம். குறிப்பாக பட்ஜெட் வாகன விரும்பிகள் மத்தியில் உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு அவர்களை அதிர்ச்சியின் விளிம்பிற்கே எடுத்துச் சென்றது.
இந்த நிலையில், அனைவருக்கும் ஆதரவளிக்கும் வகையில் மற்றும் ஓர் அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. அதாவது, கட்டாய நீண்ட நாள் பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டத்தை உயர்நீதிமன்றம் பின் வாங்கிக் கொள்வதாக கூறியிருக்கின்றது. இதனால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியிருக்கின்றனர்.
நீண்ட கால காப்பீட்டு திட்டம் இந்தியாவிற்கு புதிதல்ல. இதற்கு முன்னதாகவும் இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதனால் வாகனங்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக விலை கட்டுப்பாட்டு இத்திட்டத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்தியது. காப்பீட்டு நிறுவனங்களுடன் திட்டத்தை ஒழுங்குப்படுத்துவற்கான பணியில் அது களமிறங்கியது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் உயர்நீதிமன்றம் மீண்டும் இத்திட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்டது. தற்போது தனது உத்தரவை பின் வாங்குவதாக அறிவிப்பும் வெளியிட்டிருக்கின்றது. வாகனங்களில் பயணிப்பவர்கள், பில்லியன் ரைடர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு பரந்த காப்பீட்டு திட்டத்தை நீதிமன்றம் கட்டாயமாக்கியது. குறிப்பாக, பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் இந்த அதிரடி உத்தரவை நிறுவனம் வெளியிட்டிருந்தது.
ஆனால், இதை நடைமுறைப்படுத்த தற்போது சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தினால் நீதிமன்றம் உத்தரவை பின் வாங்கியிருப்பதாக அறிவித்திருக்கின்றது. முன்னதாக நீண்ட கால காப்பீடு குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவை வெளியிட்டதை அடுத்து, அந்த உத்தரவை அமல்படுத்தும் பணியில் துறை சார்ந்த அதிகாரிகள் களமிறங்கியிருந்தனர். இந்த நிலையிலேயே உத்தரவு தற்போது பின் வாங்கப்பட்டிருக்கின்றது அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
முன்னதாக நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தை உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பர் மாதம் அமல்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவினால் புதிய வாகனங்களின் விலை மிகக் கடுமையாக உயரவிருந்தது. அது, தற்போது இருக்கும் விலையில் இருந்து எட்டு சதவீதம் தொடங்கி பத்து சதவீதம் வரை உயர்த்துவதற்கான சாதகத்தை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக பைக் மற்றும் ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களின் விலை ரூ. 5 ஆயிரம் தொடங்கி ரூ. 6 ஆயிரம் வரையும், ஆரம்ப நிலை கார் மாடல்களான ஆல்டோ மற்றும் க்விட் போன்ற கார்களின் விலை ரூ. 50 ஆயிரம் வரையிலும், அதுவே சற்று உயர் நிலை மாடல்களாக இருந்தால் (க்ரெட்டா போன்ற உயர் ரக எஸ்யூவி வாகனங்கள்) அவற்றின் விலை ரூ. 2 லட்சம் வரையிலும் உயரும் என வாகன கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
நல்ல வேலையாக இதைத் தடுக்கும் வகையில் தனது உத்தரவை நீதிபதி எஸ். வைத்தியநாதன் பின் வாங்கியிருக்கின்றார். ஏற்கனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக புதிய வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றனர். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் காரணத்தினால் வாகன உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக வாகனங்களின் விலைகளை உயர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையில் நீண்ட கால காப்பீட்டு திட்டம் இன்னும் சில சதவீதம் புதிய வாகனங்களின் விலையை உயர்த்துமானால் வாகனங்களின் விற்பனை பல மடங்கு பாதிக்கும் என வாகனத்துறை பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வாகனத்துறை இருக்கின்றது. ஆகையால், பொருளாதார நிபுணர்களும் இதனால் உயர்நீதிமன்றத்தில் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். தற்போது, உத்தரவு பின்வாங்கப்பட்டிருப்பதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியிருக்கின்றனர்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!