Just In
- 4 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 30 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 52 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா?
மஹாராஷ்டிரா காவல் துறை செய்திருக்கும் அதிரடி பற்றிய தகவலை அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்பதால், ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மஹாராஷ்டிராவில் மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மஹாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியுள்ளார். அத்துடன் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 11 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து, விதிமுறைகளை மீறியதாக, ஐபிசி செக்ஸன் 188-ன் கீழ் (அரசு அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு கீழ்படியாதது) மொத்தம் 1,61,821 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 29,990 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 89,459 வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர முறைகேடான போக்குவரத்து தொடர்பாக 1,335 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால், தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மும்பையில் புதிய விதிமுறைகளை காவல் துறையினர் கொண்டு வந்துள்ளனர். இதன்படி உரிய காரணம் இல்லாமல், ஒருவர் தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் செல்லக்கூடாது. அப்படி சென்றால், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஆனால் அலுவலகம் செல்வோர் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக செல்வோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதிலும் காவல் துறையினர் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இடம் இல்லை என்பதாலும், வாகனங்கள் திருடப்பட்டு விடுமோ? என்ற அச்சம் காரணமாகவும், காவல் துறையினர் வாகனங்களை அவசர அவசரமாக உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டாலும் கூட, போலீசாரின் நடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
உரிய காரணம் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே அவசியம் இல்லாமல் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. இது காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, கொரோனா தொற்றில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.
Note: Images used are for representational purpose only.
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்