Just In
- 7 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 26 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 4 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
Don't Miss!
- Movies நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
ஐகோர்ட் பிறப்பித்த அடுத்த அதிரடி உத்தரவு இதுதான்... கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கிய போலீசார்...
ஐகோர்ட் பிறப்பித்த அடுத்த அதிரடியான உத்தரவை தொடர்ந்து, போலீசார் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், உலகிலேயே மிகவும் அபாயரமான சாலைகளில் ஒன்றாக இந்திய சாலைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் சரிவர கடைபிடிப்பதில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த விதிமுறையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதிமுறை முறையாக அமல்படுத்தப்படாததால் நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தமிழக போலீசார் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் செய்யும் மற்றொரு விதிமுறை மீறல் தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுவதுதான். குறிப்பாக ப்ரஸ், போலீஸ், ஜட்ஜ் போன்ற ஸ்டிக்கர்களுடன் உலா வரும் தனியார் வாகனங்களை சாலைகளில் எளிதாக காண முடியும். இது போன்ற ஸ்டிக்கர்கள் மார்க்கெட்டில் மிக எளிதாக கிடைக்கின்றன.
பத்திரிக்கை, காவல் மற்றும் நீதி துறைகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூட இத்தகைய ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் போலியாக ஒட்டி கொள்கின்றனர். இதன் மூலம் சில சமயங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டாலும் கூட சில சமயங்களில் போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
எனவே கார்களின் விண்டு ஸ்கீரின், இரு சக்கர வாகனங்களின் மட்கார்டு மற்றும் நம்பர் பிளேட்களில் பலர் இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி கொள்கின்றனர். இந்த சூழலில் ப்ரஸ், போலீஸ் மற்றும் ஜட்ஜ் போன்ற துறைகள் தொடர்பான லோகோக்கள் மற்றும் எழுத்துக்கள் தனியார் வாகனங்களில் இடம்பெறக்கூடாது என பாம்பே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, ப்ரஸ், போலீஸ் மற்றும் ஜட்ஜ் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை மும்பை போலீசார் தொடங்கியுள்ளனர். இந்த தகவலை மும்பை போலீசிஸ் இணை கமிஷனர் (டிராபிக்) மதுகர் பாண்டே உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக டிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மோட்டார் வாகன விதிகளின் செக்ஸன் 134 (6) மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 177 ஆகியவற்றின்படி, தனியார் வாகனங்களில் ஓவியம், ஸ்டிக்கர் ஆகியவற்றை ஒட்டினால், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...