முதல் ஊழியருக்கு கிடைத்த காஸ்ட்லி கிஃப்ட்! 2026 பிறந்ததும் இப்படி ஒரு சர்ப்பிரைஸா?
சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு காஸ்ட்லியான பரிசுகளை வழங்குவதை நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். குறிப்பாக முக்கியமான நாட்களான, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது இப்படியான பரிசளிப்பு விழா நடக்கும். ஆனால் சமீபத்தில் இது போன்று அதே நேரம் சற்று வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ப்ளூ ஆரஞ்ச் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் சமீபத்தில் தனது ஊழியர்களுடன்புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இந்த விழாவின் போது இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது அவர் தனது நிறுவனத்தில் முதல் ஆளான வேலைக்கு சேர்ந்த ராகுல் என்பவரை பற்றி பேசினார்.

அப்பொழுது அவர் தனது நிறுவனத்திறகாக எவ்வளவு உழைத்துள்ளார். எவ்வளவு தியாகங்களை செய்துள்ளார். என்று அவரை பாராட்டி பேசினவார். அவர் பேசும்போதே அவரது உழைப்பை பாராட்டி அவருக்கு பரிசு கிடைக்கப்போகிறது என அங்கிருந்தவர்களுக்கும் ஏன் ராகுலுக்கும் கூட தெரிந்தது. ஆனால் என்ன பரிசு என யாருக்கும் புரிய வில்லை.
இந்நிலையில் அவர் தனது பேச்சை முடிக்கும் போது இனி ராகுல் அலுவலகத்திற்கு மெட்ரோவில் வரவேண்டாம் என கூறி அவரக்ககார் சாவி ஒன்றை பரிசளித்தார். அதன் பிறகு அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா பிஇ6 கார் துணியால் மூடப்பட்டது திறக்கப்பட்டது. இந்த காட்சிகள் எல்லாம் அந்நிறுவனம் உரிமையாளர்கள் சித்தார்த் சபர்வால் மறஅறம் மோக்கம் சிங் ஆகியோரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மஹிந்திரா பிஇ6 கார் இந்தியாவில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த கார் எலெக்ட்ரிக் கார் ஆகும். எஸ்யூவி வடிவமைப்பில் இருப்பதால் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. இந்த காரின் எந்தவேரியன்டை அவர் வாங்கினார் என்ற சரியான தகவல் இல்லை. நம் கணிப்பின்படி டாப் வேரியன்டான பேக் 3 வேரியன்டை தான்அவர் வாங்கியிருப்பார் என கருதுகிறோம்.அப்பொழுது அவர் தனது நிறுவனத்திறகாக எவ்வளவு உழைத்துள்ளார். எவ்வளவு தியாகங்களை செய்துள்ளார். என்று அவரை பாராட்டி பேசினவார். அவர் பேசும்போதே அவரது உழைப்பை பாராட்டி அவருக்கு பரிசு கிடைக்கப்போகிறது என அங்கிருந்தவர்களுக்கும் ஏன் ராகுலுக்கும் கூட தெரிந்தது. ஆனால் என்ன பரிசு என யாருக்கும் புரிய வில்லை.
இந்நிலையில் அவர் தனது பேச்சை முடிக்கும் போது இனி ராகுல் அலுவலகத்திற்கு மெட்ரோவில் வரவேண்டாம் என கூறி அவரக்ககார் சாவி ஒன்றை பரிசளித்தார். அதன் பிறகு அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா பிஇ6 கார் துணியால் மூடப்பட்டது திறக்கப்பட்டது. இந்த காட்சிகள் எல்லாம் அந்நிறுவனம் உரிமையாளர்கள் சித்தார்த் சபர்வால் மறஅறம் மோக்கம் சிங் ஆகியோரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த டாப் வேரியன்ட் கார் பிரிமியம் மற்றும் ஸ்போர்ட்டியான லுக்கை வழங்கும் திறன் கொண்டது. இதில் 79 kWhபேட்டரி பேக் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளுது. இந்த கார் 282 பிஎச்பி பவர் மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ18.90 லட்சம் முதல் ரூ27.65 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பரிசாக காரை வழங்குவது வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. இந்தியாவில் இந்த மாதிரி சம்பவங்கள் அதிரித்து வருவது காருக்கான தேவை அதிகரித்து வருவதை காட்டுகிறது. உங்களுக்கு பரிசாக கிடைக்க வேண்டும் என்றால் என்ன கார் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications








