Just In
- 8 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 4 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 5 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விமான விற்பனையை துவங்க மஹிந்திரா திட்டம்
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சிறிய ரக விமானத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. வாகன தயாரிப்பு துறையில் இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா.
இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், எஸ்யூவி வகை கார்கள், கனரக வாகனஙகள், டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள் தயாரிப்பில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் விமான தயாரிப்பு மற்றும் உதிரிபாக தயாரிப்புத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், எஸ்யூவி வகை கார்கள், கனரக வாகனஙகள், டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள் தயாரிப்பில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் விமான தயாரிப்பு மற்றும் உதிரிபாக தயாரிப்புத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா ஏரோஸ்பேஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிப்ஸ்ஏரோ என்ற விமான தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியது. அந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் GA8 Airvan என்ற சிறிய வகை விமான மாடலை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே 220 GA8 Airvan விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் 30 நாடுகளில் இந்த விமானங்கள் பயன்பாட்டிலும் உள்ளன. இந்த நிலையில், இந்த விமானத்தை இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.பி.சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனுமதி கிடைத்தால் உடனடியாக இந்த விமானத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், இந்த விமானத்திற்கு அனுமதி கிடைப்பதில் இந்திய விமான போக்குவரத்து விதிகளின்படி சில நடைமுறை பிரச்னைகள் இருக்கின்றன. அதாவது, 1,500 கிலோ எடைக்கும் அதிகமான விமான மாடல்கள் இரண்டு பைலட்டுகள் இயக்கும் வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.
ஆனால், இந்த விமானம் ஒரு பைலட்டை மட்டுமே வைத்து இயக்கும் வசதி கொண்டது. எனவே, இதுதொடர்பாக, தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக சுக்லா தெரிவித்தார். மேலும், இந்தியாவில் தங்களது விமானத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இங்கேயே இந்த விமானத்தை தயாரிக்கவும் திட்டம் உள்ளதாக அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் தயாரிப்பதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலியாவின் விமான போக்குவரத்து ஆணையத்திற்கும் அமெரிக்க, ஐரோப்பிய விமான போக்குவரத்து ஆணையங்களுக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் மூலமாக இந்த விமானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி இருக்கிறது.
எனவேதான் அங்கேயே தயாரிக்கும் கட்டாய நிலை உள்ளது. மேலும், ஜிப்ஸ்ஏரோ விமானங்களுக்கான உதிரிபாகங்கள் பெங்களூரில் உள்ள எங்களுடைய ஆலையிலிருந்துதான் தயாரித்து அனுப்பப்படுகின்றன. எனவே, இங்கு விதிமுறைகள் சாதகமானால் நிச்சயம் இங்கேயே தயாரிக்க முடியும்," என்றார்.
இதனிடையே, கிப்ஸ்ஏரோ ஜிஏ8 ஏர்வேன் விமானத்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு இரண்டு பைலட்டுகளுக்கு ஏற்றவாறு காக்பிட்டில் மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கும். அந்த மாறுதல்களுக்கு அனுமதி கிடைத்தால், இந்த ஆண்டு இறுதியில் இந்த விமானம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கிப்ஸ்ஏரோ நிறுவனத்துடன் இணைந்து ஏர்வேன் 10 என்ற மாடலை மஹிந்திரா தயாரித்து வருகிறது. இந்த விமானத்தில் 10 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். இந்த விமானத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் மஹிந்திராவிடம் உள்ளது.
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!