Just In
- 26 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
போலீஸ் உதவி கமிஷனர் என கூறியவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்... விசாரணையில் பகீர் தகவல்...
போலீஸ் உதவி கமிஷனர் என கூறிய நபரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பலரின் உயிரை பறித்து விட்டது. எனவே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் பலர் தேவையில்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வந்து கொண்டுள்ளனர்.
எனவே ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை கண்காணிப்பதற்காக காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பலரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஐதராபாத் நகரிலும் காவல் துறையினர் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவர் தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என பொய்யாக கூறியுள்ளார். எனவே காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவத்தன்று காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்றை காவல் துறையினர் நிறுத்தினர்.
அதன் உள்ளே இருந்த நபர் தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என கூறினார். அத்துடன் அடையாள அட்டையையும் காண்பித்தார். ஆனால் இது போலியான அடையாள அட்டை என்பதை அங்கு இருந்த மூத்த அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து விட்டார். பின்னர் காருக்குள் இருந்த நபரை வெளியே வரும்படி அவர் கூறினார்.
வெளியே வந்த அந்த நபர், தான் ஒரு பத்திரிக்கையாளர் எனவும், இந்த அடையாள அட்டை தன்னுடைய தந்தையுடையது எனவும் மழுப்பலாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரது பர்ஸை சோதனையிட்டனர். அப்போது பல்வேறு துறைகளின் போலியான அடையாள அட்டைகள் அதில் இருந்தன.
இதன் காரணமாக அந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவரது மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து டிவி 31 நியூஸ் நெட்வொர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மிகவும் விலை உயர்ந்த கார்கள் மீதும் கூட காவல் துறையினர் பாகுபாடு காட்டுவதில்லை. அவற்றையும் அதிரடியாக பறிமுதல் செய்து விடுகின்றனர். இதற்கிடையே பெங்களூர் நகரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை. எனவே 10 ஆயிரம் வாகனங்களை விடுவிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். அபராதம் விதித்து விட்டு வாகனங்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மற்ற வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைக்கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் அனைவரும் முறையாக கடைபிடிப்பது மிகவும் அவசியமானது. எனவே தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே செல்லாதீர்கள்.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...