Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
உங்க வண்டில இது இருந்தா அவ்ளோதான்! 6 மாசம் ஜெயிலில் போட கோர்ட் அதிரடி உத்தரவு! போலீஸ்காரங்க வேட்டையாட போறாங்க!
வாகன உரிமையாளர்களுக்கு 'செக்' வைக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால், காவல் துறையினர் வேட்டைக்கு தயாராகி வருகின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மாடிஃபிகேஷன் (Modification) செய்வது சட்ட விரோதம் ஆகும். ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், தங்கள் வாகனங்களில் பல்வேறு விதமான மாடிஃபிகேஷன்களை செய்து வருகின்றனர்.
Image used for representation purpose only
குறிப்பாக மஹிந்திரா தார் (Mahindra Thar) போன்ற எஸ்யூவி (SUV) ரக கார்கள் மற்றும் ராயல் என்பீல்டு பைக்குகள்தான் (Royal Enfield Bikes) மிகவும் அதிகமாக மாடிஃபிகேஷன் செய்யப்படுகின்றன. சாலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வாகனம் மிகவும் அழகாக தெரிய வேண்டும் என உரிமையாளர்கள் நினைப்பதுதான் இதற்கான முதல் காரணம். வாகனத்தின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் கூட ஒரு சிலர் மாடிஃபிகேஷன்களை செய்து வருகின்றனர்.
இப்படி விதிமுறைகளை மீறி வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்பவர்களை எல்லாம் எச்சரிக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்றை நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக தனது மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் மாடிஃபிகேஷன்களை செய்திருந்த உரிமையாளர் ஒருவருக்கு, ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் தற்போது 6 மாத சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. அடில் ஃபரூக் பட் என்பவர்தான் மாடிஃபிகேஷனுக்காக தற்போது தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.
அவர் தனது மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் செய்திருந்த மாடிஃபிகேஷன்கள் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 52-ன்படி, விதிமுறைகளை மீறியது ஆகும். மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டது பழைய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய டயர்கள் மற்றும் சைரன் உள்ளிட்டவற்றின் மூலமாக இந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தது. இந்த மாடிஃபிகேஷன்களை எல்லாம் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
அதாவது ஆர்சி எனப்படும் பதிவு சான்றிதழில் (RC - Registration Certificate) குறிப்பிட்டுள்ளபடி பழைய நிலைக்கு இந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரை அதிகாரிகள் கொண்டு வர வேண்டும். இதற்கிடையே வாகன உரிமையாளர்கள் மாடிஃபிகேஷன் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதற்கு 2 முக்கியமான காரணங்களை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு இல்லாதது முதல் காரணமாக கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது 2வது காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விதிமுறைகளை மீறி மாடிஃபிகேஷன் செய்ய கூடாது என்ற விழிப்புணர்வை வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிரான வேட்டையை அதிகாரிகள் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் இந்த வேட்டை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அவ்வப்போது காவல் துறை அதிகாரிகளும் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் உள்ளனர். இந்த நடவடிக்கை வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படலாம். எனவே உங்கள் வாகனங்களில் மாடிஃபிகேஷன்களை செய்திருந்தால், உடனடியாக அதனை அகற்றி கொள்வது நன்மை பயக்கும்.