Just In
- 1 hr ago மொத்தமும் மெட்டல்!! டொக்கு விழுவதற்கு வாய்ப்பே இல்ல... மஹிந்திராவின் புது எலக்ட்ரிக் ஆட்டோ!
- 1 hr ago அபராத செல்லாணை பெறுவதில் சாதனை படைத்த பெண்.. எந்த ஊரு காரியோ!.. இந்த கிழி கிழிச்சியிருக்காங்க!..
- 2 hrs ago ராயல் என்பீல்டு பைக் ஓனர்களுக்கு குறி வைத்த போலீஸ்... பக்கா ஸ்கெட்ச்... இனிமேல் ஒருத்தரும் தப்பிக்க முடியாது!
- 2 hrs ago சென்னைக்கு வருகிறாரா எலான் மஸ்க்? டெஸ்லா காரால் கூரையை பிச்சு கொட்டப்போகும் வேலை வாய்ப்புகள்!
Don't Miss!
- Sports IPL 2024 : டெஸ்ட் பேட்ஸ்மேனா நானு.. நொந்து போன கே எல் ராகுல்.. LSG vs DC போட்டியில் நடந்த அதிசயம்
- News நாட்டில் பெரிய புயல் வீசும்.. மோடி ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்படுவார்.. கோவையில் சூளுரைத்த ராகுல்
- Movies Najeeb: பாம்புகள்கூட என்னை கடிக்கலை.. எனக்கு இது மறுஜென்மம்.. ஆடு ஜீவிதம் ரியல் ஹீரோ நெகிழ்ச்சி!
- Technology வீட்டுக்குள்ள தியேட்டர் இல்ல.. தியேட்டர்குள்ள தான் வீடே.. 100-இன்ச் TV-ஐ அறிமுகம் செய்த Redmi.. என்ன விலை?
- Lifestyle உங்கள் முகம் தங்கம் போல ஜொலிக்கனுமா? இந்த தக்காளி ஃபேஸ் பேக்-ஐ ட்ரை பண்ணுங்கள்...!
- Travel அடிக்கிற வெயிலுக்கு கம்மி பட்ஜெட்டில இந்த குளிர்ச்சியான மலைவாசஸ்தலங்களுக்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாமா?
- Finance டிசிஎஸ் தொடர் வளர்ச்சி.. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெளியிட்ட Q 4 முடிவுகள்.. நல்ல முன்னேற்றம்
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
ஃபெராரி காரை வாங்க லண்டன் வங்கியில் லோன் கேட்ட மல்லையா! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
லண்டனில் உள்ள ஒரு வங்கியில் ரூ 4.03 கோடி மதிப்பிலான பெராரி காரை வாங்க கடன் கோரி விண்ணப்பபித்துள்ளார். ஆனால் அந்த வங்கி கடன் வழங்க மறுத்துவிட்டது.
இந்தியாவில் ரூ 9,000 கோடியை ஏமாற்றி வெளிநாடு சென்ற விஜய் மல்லையா, அங்கும் தனது தகிடதித்தம் வேலையை காட்ட துவங்கிவிட்டார். தனக்கு கார் வாங்க கடன் வழங்க கோரி வங்கியில் விண்ணப்பித்த நிலையில் அவரக்கு கடன் மறுக்கப்பட்டது அதன் பின் மல்லையா செய்ததை செய்தியில் படியுங்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவராக இருந்த விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ9000 கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு வெளிநாடு தப்பிவிட்டார்.
இவரை பிடிப்பது குறித்து லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இவர் குறித்து இந்திய மக்களும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் லண்டனிலும் மல்லையா கடன் வாங்க முயற்சித்த ஒரு சுவரஸ்யமான விஷயம் வெளியாகியுள்ளது. இது மல்லையா குறித்த பரபரப்பை மீண்டும் கிளப்பியுள்ளது.
மல்லையாவிடம் உள்ள கார் கலெக்ஷன்கள் அவர் வெளிநாடு தப்பி சென்ற பின்பு அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ மூலம் தான் வெளியுலகிற்கே முழுமையாக தெரியவந்தது. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மல்லையாவிடம் இருந்த கார்கள், விமானங்கள், தனி சொகுசு ஜெட் விமானம் என எல்லாம் இப்பொழுது ஏலம் விடப்பட்டு வருகின்றனர். இப்படியாக மல்லையாவின் இந்தியா சொத்துக்கள் எல்லாம் பறிபோய் வரும் நிலையில்
லண்டனில் புதிதாக கார்களை வாங்க எண்ணியுள்ளார் மல்லையா. இவருக்கு லண்டனிலும் பல சொத்துக்கள் இருந்தாலும் அதை இந்திய அதிகாரிகளால் பறிமுதல் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
இதை பயன்படுத்திக்கொள்ள யூகித்த மல்லையா லண்டனில் உள்ள ஒரு வங்கியில் ரூ 4.03 கோடி மதிப்பிலான பெராரி காரை வாங்க கடன் கோரி விண்ணப்பபித்துள்ளார். ஆனால் அந்த வங்கி உங்கள் மீது இந்தியாவில் கடனை திரும்பி தராததாக வங்கிகள் புகார் உள்ளது. மேலும் ஊடகங்களில் உங்களை பற்றி தவறான செய்தி வருகிறது இதனால் எங்களால் கடன் வழக்க முடியாது என அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
ஆதையடுத்து மல்லையா தனது தகிடுதத்தம் வேலையை காட்ட துவங்கி விட்டார். அவரது லண்டனில் உள்ள தனக்கு தெரிந்தஒருவரின் பெயரில் கடன் விண்ணப்பித்து கடனை பெற்றதாகவும்.
அந்த பணம் மூலம் வாங்கப்பட்ட காரை தற்போது மல்லையா பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கடனுக்கான மாத தவனை தொகையை கடனை வாங்கியவரின் வங்கி கணக்கு மூலம் மல்லையாவே கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக மல்லையா கடன் வாங்கியவர் வங்கி கணக்கில் ரூ 1.3 கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் கூறுப்படுகிறது.
இந்த தகவல் லண்டன் கோர்ட்டில் மல்லையாவின் விவகாரம் விசாரணைக்கு வந்த போது அவரது வக்கீல் அளித்த தகவல் அளிப்படையில் வெளியுலகிற்கு தெரியவந்தது.
இந்தியாவில் அவர் இருந்தபோது பயன்படுத்திய விலை உயர்ந்த கார்கள், விமானங்கள், ஆடம்பர படகுகள் விபரத்தை தொடர்ந்து காணலாம்
மல்லையாவின் மோட்டார் உலகம்!
பல தனி நபர் பயன்பாட்டு விமானங்களை மல்லையா பயன்படுத்தினார். அதில், ஹாக்கர் எச்எஸ் 125 -700பி என்ற விமானம் மும்பை விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அது பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்ததால், மிக மோசமான நிலையில் இருந்தது. இந்தநிலையில், பல கோடி மதிப்புடைய அந்த விமானத்தை வெறும் 22 லட்சத்திற்கு சைலென்ட் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது.
Photo Credit: Mid-day
ஹாக்கர் எச்எஸ்125 700பி மாடல் விமானத்தில் 11 பேர் வரை செல்ல முடியும். இந்த விமானத்தை மல்லையா அதிகளவில் பயன்படுத்தி வந்தார்.
Photo Via- Daily bhaskar
30 ஆண்டுகள் பழமையான அந்த விமானத்தை ஓபராய் குழுமத்திடமிருந்து விஜய் மல்லையா வாங்கினார். அந்த விமானத்தை உள்நாட்டு பயணங்களுக்கு அதிகம் பயன்படுத்தினார்.
போயிங் 727 விமானத்தையும் அவர் பயன்படுத்தினார். இந்த விமானம் அவரது பறக்கும் அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. மேலும், உலகம் முழுவதும் இருக்கும் அவருக்கு சொந்தமான இடங்களுக்கு செல்வதற்கும் இதனை பயன்படுத்தினார்.
மிகவும் பிரம்மாண்டமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டிருந்த இந்த விமானத்தை நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தினார். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடைநில்லாமல் பறக்கும் வல்லமை கொண்டது. 40 மில்லியன் டாலர்களுக்கு வாங்கிய இந்த விமானத்தை பல மில்லியன் டாலர்களை செலவிட்டு உட்புறத்தில் கஸ்டமைஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1990ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த விமானம் அவரது குறைந்த தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இதுவும் உட்புறத்தில் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்கள் மட்டுமில்லை, ஆடம்பர படகுகளையும் அவர் பயன்படுத்தி வருகிறார். அவற்றை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.
இன்டியன் எம்ப்ரெஸ் படகு
311 அடி நீளம் கொண்ட இந்த பிரம்மாண்ட ஆடம்பர படகு கத்தார் நாட்டு அரச குடும்பத்தினருக்காக 2000ல் கட்டப்பட்டது. அதன்பிறகு, இதனை மல்லையா வாங்கி இன்டியன் எம்ப்ரெஸ் என்று பெயரிட்டார். இதனை 93 மில்லியன் டாலர் விலையில் அவர் வாங்கி பயன்படுத்தி வந்தார். ஹெலிபேட், ஜிம், பொழுதுபோக்கு வசதிகள், சொகுசான படுக்கையறைகள் என இதில் இல்லாத சொகுசு வசதிகளே இல்லை எனலாம். மல்லையாவின் பல தடபுடல் விருந்து நிகழ்ச்சிகள் இதில் நடந்தன. வாடகைக்கும் விடப்பட்டது.
இன்டியன் எம்ப்ரெஸ் படகில் 20 பணியாளர்கள் இருந்தனர். 32 விருந்தினர்கள் தங்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,700 கிமீ தூரம் பயணிக்கும், 26.5 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். உலகின் 32வது மிகப்பெரிய ஆடம்பர படகு என்ற பெருமையும் இதற்கு உண்டு.
உலகின் மிகவும் பாரம்பரியமான படகுகளில் ஒன்றான கலீஸ்மாவையும் இவர் வாங்கி வைத்துள்ளார். 1906ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த படகை 1995ம் ஆண்டு 3 மில்லியன் டாலர்களை செலவிட்டு புனரமைப்பு செய்துள்ளார் மல்லையா.
Image Via- Yachtsolutions.com
இந்த கலீஸ்மா படகில் படுக்கையறைகள், சாப்பாட்டுக்கூடம், சலூன் உள்ளிட்ட பல வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. இந்த படகு மட்டுமில்லை, மல்லையாவிடம் பல விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை பயன்படுத்தினார். அதில், ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ உள்ளிட்ட கார்களும் அடக்கம். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
Image Via- Yacht Solutions.com
ரோல்ஸ்ராய்ஸ் இல்லாத பெரும் பணக்காரர்கள் இல்லை. அதிலும், கார் பிரியரான விஜய் மல்லையாவிடம் இல்லாமல் இருக்குமா. அவரிடம் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் உள்ளது. தினசரி பயன்பாட்டுக்கு அதிக அளவில் பயன்படுத்துவது இந்த காரையே.
Image Via- Indiatimes
மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே கார் ஒன்றையும் விஜய் மல்லையா வைத்திருக்கிறார். உலகின் மிக அழகிய வடிவமைப்புடைய சொகுசு கார்களில் இதுவும் ஒன்ராக குறிப்பிடப்படுகிறது. இதே காரை ரத்தன் டாடாவும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் டெல்லியில் தினசரி பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ எஸ் க்ளாஸ் காரையே. மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ220 எஸ் க்ளாஸ் கார்தான் அவரது அரசியல் வாழ்க்கையின் ஆஸ்தான மாடலாக இருந்தது. அதுமட்டுமில்லை, இவர் கார், படகு ரேஸ் பிரியர். அதன் விளைவு.
ஃபோர்ஸ் இன்டியா என்ற பெயரில் ஃபார்முலா 1 கார் பந்தய அணியையும் துவங்கினார். கார் பந்தயம் மட்டுமில்லை, படகு பந்தயங்களிலும், குதிரை பந்தயங்களிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.
மிக ஆடம்பரமாக வாழ்ந்தாலும், அவர் ஆடம்பர காரிலும் பயணித்திருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உபேர் டாக்சியில் பயணித்திருக்கிறார். அப்போது செல்லப் பிராணியை காரில் உடன் கொண்டு வருவதற்கு உபேர் டாக்சி ஓட்டுனர் எதிர்ப்பு தெரிவித்ததை ட்விட்டர் வாயிலாக வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
விமானத்துல பயணிக்கும்போது இஸ்டத்துக்கு சரக்கை ஊத்தி தருவாங்களா! இல்ல அளவு எதுவும் இருக்கா??
-
ஓலாவ சமாளிக்க முடியல! நம்ப முடியாத அளவிற்கு விலையை குறைத்த இந்திய நிறுவனம்.. இ-ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்!
-
ஏசி எல்லாம் போட முடியாது! ஓலா, உபேர் டிரைவர்கள் எடுத்த அதிரடி முடிவு!என்ன காரணம் தெரியுமா?