Just In
- 18 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 28 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஜிபிஎஸ் அட்டூழியத்தால் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை ஐஸ் உறைந்த ஏரிக்குள் விட்ட ஓட்டுநர்..!!
ஜிபிஎஸ் அட்டூழியத்தால் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை ஐஸ் உறைந்த ஏரிக்குள் விட்ட ஓட்டுநர்..!!
தொழில்நுட்ப வளர்ச்சி பெருக்கத்தால் எந்தவொரு கடினமான வேலையையும் இன்று ஸ்மார்ட்டாக செய்து முடித்துவிடக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுயிருக்கிறது.
குறிப்பாக கைப்பேசியின் செயல்பாட்டிறகாக வெளிவரும் எல்லா கண்டுபிடிப்புகளும், ஸ்மார்டான நடைமுறையின் கீழ் இயங்குவதாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜிபிஎஸ்.
ஜிபிஎஸ் உதவியுடன் ஊர்பெயர் அறிந்திராத எந்தவொரு பகுதிக்கும் நாம் சென்று திரும்பி விட முடியும். குறிப்பாக ஜிபிஎஸ்-யை நம்பித்தான் பல கார் ஓட்டுநர்கள் வேலையையே தக்கவைத்துக்கொள்கிறார்கள்.
Recommended Video
நமது அன்றாட பயணங்களை எளிமையாக்கி கொடுத்துள்ள ஜிபிஎஸ், அதேநேரத்தில் சில தவறான குறிப்புகளை அளித்து வழிகாட்டுகிறேன் என்ற பெயரில் சொதப்பி விடுவதும் உண்டு.
சிலநேரங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை கடந்து வராதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது. அதுவும் சென்னைவாசிகள் ஜிபிஎஸ்-யை நம்பி 'பங்கமான' நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
நம் நாடு என்றல்ல, உலகளவில் ஜிபிஎஸ் சொதப்பல்கள் அதிகளவில் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. டெக் உலகின் அரசனான அமெரிக்காவையும் இது விட்டுவைக்கவில்லை.
அமெரிக்காவின் வென்டார் என்ற பகுதியில் ஒருவர் ஜிபிஎஸ் வழிக்காட்டுதலுடன் சில பயணிகளோடு காரை ஓட்டி சென்றுள்ளார்.
ஜிபிஎஸின் சொல்லை தட்டாமல் தனது ஜீப் காம்பஸ் காரை ஓட்டிச்சென்ற அந்த ஓட்டுநருக்கு, சாலையைத்தாண்டி ஒரு பெரும் ஏரிக்குள் காரை ஓட்டிசெல்ல ஜிபிஎஸ் வழிக்காட்டுயிருக்கிறது.
வென்டார் நகரில் பனிக்காலம் என்பதால், கடும்குளிர் காரணமாக பனிக்கட்டிகள் உருவாகி ஏரி மீது அது உறைந்திருக்கிறது. ஓட்டுநரும் தனது ஜீப் காம்பஸ் காரை அதன் மீது செலுத்தியுள்ளார்.
கொஞ்ச தூரம் நன்றாக சொன்றுக்கொண்டு இருந்த கார், சில தூர இடைவெளிக்கு பிறகு ஆட்டம் காண தொடங்கியுள்ளது. உறைந்திருந்த பனிக்கட்டிகள் உடைந்து கார் மெல்ல மெல்ல ஏரிக்குள் மூழ்க தொடங்கியது.
உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், கார் கதவை திறந்து பயணிகளுடன் வெளியே குதித்துள்ளார். பின்பு காவல்துறைக்கு தகவல் தர அவர்கள் சம்பவ இடத்தை வந்தைடைந்தனர்.
காரின் முன்பக்கம் முழுவதுமாக மூழ்கி, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பின்பக்கம் மட்டும் வெளியே தெரிந்தது. காவலர்கள் விரைவாக செயல்பட்டு அந்த காரை முழுவதுமாக வெளியே இழுத்து போட்டனர்.
இதுப்பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஓட்டுநர் தான் 'வேஸ் ஏப்’ என்ற செயலியின் வழிக்காட்டுதல் படி கார் ஓட்டிச்சென்றதாகவும். எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், காவல்துறையினர் ஓட்டுநர் மது ஏதும்m அருந்தியுள்ளரா என்று சோதித்துவிட்டு அது இல்லை என்று தெரியவர அதற்குரிய சான்றிதழை அளித்துவிட்டு சென்றனர்.
மேலும் இந்த விபத்திற்கு காரணம் ஜிபிஎஸ்-ன் அட்டூழியமே என போலீசார் வழங்கிய சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், காரின் உரிமையாளர் காப்பீட்டு பெறுவதில் சிக்கல் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கவிற்கு நெருக்கடி கொடுக்க ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..!!
மற்ற நாட்டிற்கு வந்து செல்லும் விமானங்களை கண்காணிக்க கே.ஜே- 600 என்ற பெயரில் ரேடாருடன் கூடிய புதிய உளவு விமானத்தை தயாரித்துள்ளது சீனா.
சமீபத்தில் 50 ஆயிரம் டன் எடையுள்ள விமானம் தாங்கி போர்கப்பலை சீன அரசு கடலில் இறக்கியது. அதை தொடர்ந்து வான்வழி போக்குவரத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்த தற்போது அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது.
தனது ராணுவ பலத்தை அதிகரித்து வரும் சீனா தற்போது எதிரிநாட்டு விமானங்களை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்பம் பெற்ற உளவு விமானங்களை தயாரித்துள்ளது.
அதன்படி ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த விமானத்தின் மூலம், சீனாவினுள் அத்துமீறி நுழையும் மற்ற நாட்டு விமானங்களை எளிதில் கண்டுபிடித்த விட முடியும்.
கே.ஜே- 600 என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த உளவு விமானங்களை விரைவிலேயே சீன அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதும் அமெரிக்க 8 அடி பாய்ந்தால், சீனா அடுத்து 16 அடி பாய தயாராக இருக்கும். அது போன்ற ஒரு காரணத்திற்காகத்தான் சீன இந்த உளவு விமானங்களை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது சமீபத்தில் எஃப்035 என்ற நவீன போர் விமானங்களை அமெரிக்க அரசு தனது நட்பு நாடான ஜப்பானுக்கு வழங்கியது.
இந்த ரக விமானங்களால் ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் வரலாம் என சீன கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அதைப்போக்கவே தற்போது எஸ்.கே- 600 ரக ரேடார் பொருத்தப்பட்ட உளவு விமானங்களை சீனா தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரத்தால் இயங்கும் மிகவும் அதிநவீனமான ஸ்கேனர் கருவிகளை இந்த விமானத்தில் சீனா பொருத்தியுள்ளது.
இதைவைத்து ஜப்பானுக்குள் நுழையும் அமெரிக்காவின் எஃப்- 22எஸ், எஃப்- 35 ரக போர் விமானங்களை அந்நாடு உளவு பார்க்கும்.
இதை உறுதிப்படுத்தி பேசிய சீனாவின் ராணுவ நிபுணரான லி ஜியி, பாதுகாப்பு காரணங்களை கருதி எல்லா நாடுகளும் செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இது என்று தெரிவித்தார்.
தென் சீனா கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனா தனக்கு அதிக அச்சுறுத்துல் உள்ளதாக கருதி வருகிறது. அங்கு தான் இந்த கே.ஜே- 600 உளவு விமானங்கள் பறக்கவிடப்படுகின்றன.
வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்த உளவு விமானங்களை தனது ராணுவத்தில் இணைக்கவும் சீனா முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Picture credit: Wiki Commons
Note: Images for representative purpose only
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!