சாலையில் கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு அபராதம் விதித்த போலீசார்..!!
சாலையில் கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு அபராதம் விதித்த போலீசார்..!!
ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதியை மீறிய குற்றத்திற்காக இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தான் காவல்துறை அபராதம் வசூலிப்பது வழக்கம். அதுதான் சட்டமும் கூட.

ஆனால் நீங்கள் படத்தில் பார்க்கும் நபர், மாருதி ஆம்னி காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு, போலீசார் இவரிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் வசிப்பவர் விஷ்ணு ஷர்மா. உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள உஞ்சா நாக்லா என்ற பகுதிக்கு தனது ஆம்னி வேனில் சென்றிருந்தார்.

அப்போது எல்லை பகுதியில் பணியில் இருந்த காவல்துறையினர், ஆம்னி வேனில் வந்த விஷ்ணு சர்மாவை வாகன சோதனைக்காக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது காவலர் பிரஹலாத் சிங் என்பவர், விஷ்ணு ஷர்மாவின் கண்ணத்தில் அறைந்து அவரிடமிருந்து ஹெல்மெட் போடாமல் வாகனத்தை ஓட்டியதாக கூறி ரூ.200 அபராதமாக வசூலித்துள்ளார்.

வாகன சோதனையின் போது அபராதம் வசூலிக்க காவலர் பிரஹலாத் தெரிவித்த காரணத்தினால் ஆச்சர்யமடைந்து போனார் பிரஹலாத் சிங்.
Recommended Video


மேலும் எதிர்காலத்தில் அபராதம் என்ற பெயரில் போலீசார் முறைகேடாக பணம் வசூலிக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் தற்போது விஷ்ணு ஷர்மா தனது ஆம்னி காரில் எங்கு சென்றாலும் ஹெல்மெட் அணிந்தே ஓட்டி செல்கிறார்.

உஞ்சா நாக்லா எல்லைப்பகுதியில் விஷ்ணு சர்மாவை அறைந்த காவலர் பிரஹலாத் சிங்கிடம் இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் கேட்கப்பட்டது.

அப்போது அவர், அபாரதத்திற்காக வழங்கப்பட்ட செலானில், அதற்கான காரணம் தவறாக குறிப்பிட்டப்பட்டு உள்ளது என்றும், உண்மையில் விஷ்ணு சர்மா சீட் பெல்டு அணியாமல் வந்ததால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

காவலர் பிரஹலாத் சிங்கின் பேச்சை முற்றிலுமாக மறுத்துள்ளார் விஷ்ணு ஷர்மா. மேலும் சம்பவம் நடந்த அன்று சோதனையின் போது தான் சீட் பெல்டு அணிந்திருந்தாகவும் அவர் கூறுகிறார்.

கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியாமல் வந்தத்தற்கான அபராதத் தொகை, மோட்டார் சைக்கிள் செலானில் தான் எழுதப்பட்டுள்ளது.

மேலும் விஷ்ணு சர்மாவின் ஆம்னி கார் பதிவு எண்ணைத்தான் செலானில் வாகனம் குறித்த தகவலில் காவலர் பிரஹலாத் சிங் எழுதியுள்ளார்.

இந்த அடிப்படை காரணங்களை வைத்து பார்க்கும் போது சம்பவம் நடந்த போது சோதனையில் இருந்த காவலர்கள் மீதுதான் தவறு என்பது தெரியவந்துள்ளது.

வகான சோதனையில் ஈடுபடும் காவலர்கள் குறித்து இரண்டாவது முறையாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாடு இது.
இதற்கு முன்னதாக கோவாவில் கார் ஓட்டுநருக்கு இதே போன்ற காரணத்துடன் தான் அபராதம் வசூலிக்கப்பட்டது.

காவல் பணியில் உள்ள போலீஸாரின் கவனக்குறைவால் தான் இந்த இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இருந்தாலும் நாடு முழுவதும் கவனத்தை பெற்றிருக்கும் இந்த தவறுக்கு யார் பொறுப்பு என்பதை காவல்துறையின் அடுத்தக்கட்ட விசாரணையிலே தெரியவரும்.

மோட்டார் வகான சட்டப்படி, கார் ஓட்டுநர்கள் சீட் பெல்டு அணிவது கட்டாயம். ஆனால் கார் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்பதை எந்த ஷரத்துகளும் தெரிவிக்கவில்லை.

கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கான அபராதம் விதிக்கப்பட்டு அதற்கு ஆதாரமாக செலான் கொடுக்கப்பட்டு இருப்பது தவறுதான்.

வாகன ஓட்டிகள் சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள சட்டமும், வழிமுறைகளும் இருந்தாலும், அவற்றை சரிவர காவல்துறையால் மட்டுமே செய்யவைக்க முடியும்.
நிலைமை இப்படியிருக்க, தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நடைபெறும் இதுபோன்ற முறைகேடான தவறுகளுக்கு அனைத்து மாநில அரசும் தீர்வு காண்பது மிகவும் முக்கியம்.


Click it and Unblock the Notifications








