Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போலீஸ் காரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...
போலீஸ் காரில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆனதால், இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் டிக் டாக் மோகம் ஆட்கொண்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என பாலின வேறுபாடுகளையும் கடந்து அனைவரின் கவனத்தையும் டிக் டாக் ஈர்த்துள்ளது. இந்த சூழலில் தற்போது வைரலாக பரவி வரும் டிக் டாக் வீடியோ ஒன்று, இந்தியா முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் சட்டை அணியாமல் இருக்கும் இளைஞர் ஒருவர் மாருதி சுஸுகி எர்டிகா காரை மெதுவான வேகத்தில் ஓட்டி வருகிறார். திடீரென காரை விட்டு இறங்கிய அந்த இளைஞர், மேற்கூரையின் மீது ஏறுகிறார். இதன்பின் மேற்கூரையில் சில புஷ்அப்களை எடுத்துவிட்டு மீண்டும் தரையில் குதிக்கிறார். அதன்பின் மீண்டும் காருக்குள் ஏற முயல்கிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைந்து விட்டது.
சம்பந்தப்பட்ட இளைஞர் மேற்கூரையில் புஷ்அப் செய்தபோது, காருக்குள் யாரும் இல்லை. அது தானாகவே இயங்கி கொண்டிருந்தது. இதற்கே அதிர்ச்சியாக வேண்டாம். வீடியோவில் காணக்கூடிய காரில், டெல்லி போலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ள இளைஞரை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை. அவர் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
ரிஜிஸ்ட்ரேஷன் தகவல்களை வைத்து பார்க்கையில், இந்த கார் ஜே.பி.ஷர்மா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. ஜே.பி.ஷர்மா டெல்லி போலீசில் பணியாற்றுகிறாரா? அல்லது இது டெல்லி போலீசார் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ காரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலை தளங்கள் மூலம் டெல்லி போலீசாருக்கு புகார்கள் பறந்து கொண்டுள்ளன.
இதனை விசாரிப்பதாக டெல்லி போலீசாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். டெல்லி போலீசார் ஏராளமான மாருதி சுஸுகி எர்டிகா கார்களை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கார் அவர்களின் அதிகாரப்பூர்வ காரா? அல்லது இந்த காரின் உரிமையாளர் டெல்லி போலீசின் ஸ்டிக்கரை முறைகேடாக பயன்படுத்தியுள்ளாரா? என்பதும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.
அதே சமயம் இந்த வீடியோவில் காணக்கூடிய காரின் மேற்கூரையில் போலீசாரின் அதிகாரப்பூர்வ கார்களை போன்று, ஃப்ளாஷர்கள் மற்றும் சைலென்சர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த வீடியோவை அப்லோட் செய்த நபரின் டிக்டாக் ப்ரொபைல் மூலமாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வீடியோவை உருவாக்கிய நபர்தான் அப்லோட் செய்தாரா? அல்லது வேறு எங்கேயாவது கிடைத்த வீடியோவை வெறுமனே அப்லோட் செய்தாரா? என்பதும் இன்னும் தெரியவில்லை. விசாரணை முடிவில்தான் உறுதியான தகவல்கள் தெரியவரும். இதனிடையே தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
காரின் மேற்கூரையில் இந்த இளைஞர் செய்த ஸ்டண்ட் மிகவும் அபாயகரமானது. அவர் ஸ்டண்ட் செய்ய காரை விட்டு வெளியேறியபோது, காரை கட்டுப்படுத்த ஒருவர் கூட இல்லை. அது தானாகவே இயங்கியது. அனேகமாக இது டீசல் இன்ஜின் எர்டிகா காராக இருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக டீசல் இன்ஜின்களில் லோ-எண்ட் டார்க் அதிகமாக இருக்கும்.
லோயர் கியர்களில் கிளட்ச்சை முழுவதுமாக ரிலீஸ் செய்த பிறகும், இன்ஜின் ஸ்டாப் ஆகாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில்தான் உள்ளே யாரும் இல்லாமலேயே கார் இயங்கியிருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இது மிகவும் அபாயகரமான ஸ்டண்ட். இது போன்ற ஸ்டண்ட்களை நீங்கள் ஒருபோதும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?