எதிர்த்து பேசிய மனைவியை கார் பானாட்டில் கட்டி வைத்து கதற கதற கார் ஓட்டி சென்ற கணவன்..!!
எதிர்த்து பேசிய மனைவியை கார் பானாட்டில் கட்டி வைத்து கதற கதற கார் ஓட்டி சென்ற கணவன்..!!
காரின் முகப்பில் மனைவியை கட்டிவைத்து , அவர் கதற கதற காரை ஓட்டிசென்ற கணவனை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

ஈரானில் நடைபெற்ற இந்த சம்பவம் உலகளவில் பரப்பரப்பாகியுள்ளது. மேலும் அந்த கணவனின் வெறிச்செயலுக்கு கண்டன குரல்களும் எழுந்து வருகின்றன.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
சண்டை ஆரம்பித்த சில நேரங்களிலேயே, தம்பதிகளுக்குள் வாய்த்தகராறு கடும் வார்த்தை போராக மாறியது.

இதில் மனைவியின் பேச்சால் கடும் கோபம் அடைந்த அந்த கணவன். மனைவிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக, அவரை வலுகட்டாயமாக காரின் முகப்பு பகுதியில் ஏற்றினார்.

பிறகு அவரது கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி வைத்து, மனைவியை அவமானப்படுத்தும் நோக்கில், காரை சாலை பகுதிக்கு கொண்டு வந்து வேகமாக ஓட்டி சென்றார்.

தம்பதிகளுக்குள் நடந்த இந்த சண்டையை, அங்கு கூடியிருந்த மக்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

காரில் கட்டப்பட்ட அந்த பெண், தொங்கியபடியே கத்திக்கதறியபடி இருந்தார். பிறகு கார் சென்ற சிறிது தூரத்தில் அப்பெண் தரையில் விழுந்து படுகாயமடைந்தார்.

ஒரு பெண் காரின் முகப்பு பகுதியில் கட்டப்பட்டு, சாலையில் செல்வதை பார்த்த பல வாகன ஓட்டிகள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தனர்.

அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அந்த கணவனின் வெறிச்செயலுக்கு கண்டனங்களை பதிவிட்டனர். மேலும் இந்த வீடியோ தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.

காரில் கட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கு தற்போது அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இரானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபோன்ற பயங்கர செயலில் ஈடுபட்டு, மனைவி என்றும் பாராமல் கொடுமை செய்த கணவனை ஈரான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணை காயப்படுத்தியதாக கூறி ஈரான் நாட்டு சட்டவிதிகளின் படி அவருக்கு பெரிய தண்டனை விதிக்கப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூகவலைதளங்களில் இந்த வீடியேவை பார்க்கும் சிலர்,
கணவனுக்கும் மனைவிக்கு சச்சரவுகள் வரலாம் ஆனால், அதற்காக கட்டிய மனைவியை காரில் கட்டிவைத்து கொடுமை செய்தது மாபெரும் தவறு என்ற ரீதியில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஃபரீதா என்ற பெண், இதுபோன்று செயலை என் மகன் செய்திருந்தால், அவனை தலைமுழுகியிருப்பேன் என பதிவிட்டது சமூகவலைதளங்களில் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications








