Just In
- 3 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 5 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுனர்!! வழக்குமேல் வழக்கு போட்டு தூக்கிய போலீஸார்!
தற்போதைய காலக்கட்டத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோக்களினால் தான் பெரும்பாலானோர் போலீஸாரிடம் சிக்குகின்றனர். அந்த அளவிற்கு இணையம் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறியுள்ளது.
இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், ஆம்புலன்ஸை வழி மறுத்தவாறு ஒருவர் தனது எர்டிகா காரை ஓட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து எர்டிகா கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் டக்ஷினா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-66 இல் கடந்த ஜூலை 19ஆம் தேதி மாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு அடி கூட நகர முடியாத கடுமையான போக்குவரத்து நெரிசலின்போதும் ஆம்புலன்ஸிற்கு வழிவிட முயற்சிக்க வேண்டும் என்பது மனிதநேயம் உள்ள அனைவரும் பின்பற்றும் விஷயமாகும்.
ஏனெனில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஏதேனும் ஒரு விஷயத்திற்காகவே சென்று கொண்டிருப்பர். ஆனால் ஆம்புலன்ஸ் ஒருவரது உயிரை காப்பாற்ற இயங்கி கொண்டிருக்கும். இருப்பினும் ஊருக்கு நான்கு பேர் மனிதநேயமற்று இருக்க தானே செய்வார்கள்.
அத்தகைய ஒருவரே தற்போது மங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த ஆம்புலன்ஸை வழிமறிப்பது போல் ஓட்டியது அனைத்தையும் ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்துள்ளனர்.
அதனை சமூக வலைத்தளங்களில் பரப்ப விட்டு தற்போது அந்த எர்டிகா கார் ஓட்டுனருக்கு தண்டனையையும் வாங்கி கொடுத்துள்ளனர். கனாச்சுர் மருத்துவமனை செல்வதற்காக அந்த ஆம்புலன்ஸ் தேசிய நெடுஞ்சாலை 66-இல் சென்று கொண்டிருந்தது.
மாருதி சுஸுகி எர்டிகா காரை ஓட்டி வந்த 31 வயதான ஓட்டுனர் சரண் என்பவர் கும்பளா பைபாஸ் அருகே கைது செய்யப்பட்டுள்ளதாக மங்களூர் நகர தெற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஐபிசியின் பிரிவு 279 மற்றும் 1988 மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194(இ) ஆகியவற்றின் கீழ் பொது சாலையில் ஆக்ரோஷமாக வாகன ஓட்டியதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் இதன் பிறகே இவர் இது மட்டுமில்லாமல் வழியில் ஆம்புலன்ஸை வழி மறித்தவாறும் ஓட்டி வந்துள்ளார் என்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதனால் சரணின் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவசரகால வாகனத்தின் செயல்பாட்டிற்கு இடையூறு விதித்ததற்காக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் என் சாஷி குமார் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ளவர் ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
மேலும், பொது மக்களிடம், அவசரகால வாகனங்களை சீராக செல்ல அனுமதிக்கவும் என வேண்டுகோள் ஒன்றையும் போலீஸ் கமிஷ்னர் விடுத்துள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், கார் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவருக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.