Just In
- 48 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...
மாருதி சுசுகி நிறுவனம் 3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை குறிப்பிட்ட மாநிலத்தின் மருத்துவமனைகளுக்கு தானம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒருவரான மாருதி சுசுகி, ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை கட்டமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
முழுக்க முழுக்க இலாப நோக்கமற்ற முறையில் இப்பணியில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. கோவிட்-19 இரண்டாம் அலை பரவலில் இந்தியா, பெரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றது. உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் பல உயிர்கள் இறந்திருக்கின்றன.
இந்த நிலையிலேயே அரசுகளுக்குக் கை கொடுக்கும் விதமாக மாருதி சுசுகி நிறுவனம் ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கியது. இந்தியாவில், மிக குறைந்தளவிலேயே ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உண்மை நிலையைக் கண்டறிந்த மாருதி சுசுகி, உடனடியாக களத்தில் இறங்கியது. தொடர்ந்து, ஏற்கனவே இத்துறையில் கொடிக்கட்டி பறந்து வரும் ஜேபிஎம்எல், எஸ்கேஎச் மெட்டல் மற்றும் மதர்சன் உள்ளிட்ட பிஎஸ்ஏ உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை கட்டமைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.
இதன் விளைவாக தற்போது மூன்று புதிய ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை அது உருவாக்கியிருக்கின்றது. அனைத்தும் ஹர்யானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர்களையே மாநிலத்தின் முதலமைச்சர் மனோகர் லால் கத்தர், பயன்பாட்டிற்கு திறந்து வைக்க இருக்கின்றார்.
ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உருவாக்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம் அவற்றைக் கண்கானிப்பதற்காக தனி குழு ஒன்றையும் மாருதி சுசுகி தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குழு சில மாதங்கள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் ஆக்சிஜன் ஜெனரேட்டர்களைக் கண்கானிக்கும்.
மாருதி சுசுகி மருத்துவமனை
மாருதி சுசுகி நிறுவனம் பன்முக மருத்துவம் வசதிக் கொண்ட மருத்துவமனையை குஜராத்தின் அகமதபாத் மாவட்டத்தில் உள்ள சீதாபூரில திறந்து வைத்திருக்கின்றது. 126 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை தற்போது கோவிட் சிறப்பு மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியிருக்கின்றது.
சுமார் 50 படுக்கைகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக மாருதி கூறுகின்றது. இதனை இன்னும் பல மடங்கு உயர்த்தும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது. இந்த மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை, தாய்-சேய் மருத்துவம், இருதய பராமரிப்பு, கண் பராமரிப்பு, ஈஎன்டி, தீக்காயங்களுக்கான பிரிவு என பன்முக சேவை வழங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350