Just In
- 28 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை!
பெங்களூரு ஏர்போர்ட் சாலையில் நிகழ்ந்ததாகக் கூறி வைரலாகி வரும் பெரும் விபத்தின் வீடியோவைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் சமூகத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்கள் பரப்பட்டு வந்த நிலைமை மாறி, தற்போது பொய்யான வதந்திகள் அதிகம் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க அரசும், காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் வதந்திகளுக்கு முற்று புள்ள வைக்க முடியாமல் அவர்கள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.
அவ்வாறு, கடந்த வியாழனன்று பெங்களூருவில் பெரும் விபத்து ஏற்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குறைந்தது 20க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகி இருந்தன.
இந்த பெரும் விபத்தானது பெங்களூருவின் ஏர்போர்ட் சாலையில் நடைபெற்றதாகவும், இதில் பலர் பயங்கரமாக காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் நேற்று பரவ ஆரம்பித்தது.
இதையறிந்த செய்தியாளர்கள் இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸாரைத் தொடர்புக்கொண்டு போசிய போது, "தற்போது வைரலாகி வரும் இந்த பெரும் விபத்தின் வீடியோ, பொய்யானது. இந்த விபத்து நடந்து பல நாட்கள் கடந்துவிட்டன. இதுபோன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
மேலும், இதுபோன்ற வதந்தகிளைப் பரப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் பெங்களூரு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் இதுபோன்று வதந்திகள் பரவி வருவதை நாம் கண்டிருப்போம். அவ்வாறு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதப்படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் மத்திய ரிசர்வ் படைவீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தினான். இதில், 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் புல்வாமா பகுதியில் இறந்ததாகக் கூறி சிலரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது. அந்த புகைப்படங்களை வைத்து பேனர் அடித்த பொதுமக்கள் அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆனால், அவர்கள் அஞ்சலி செலுத்தியது மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த வீரர்களுக்கு அல்ல, ஏனென்றால் அந்த பேனரில் இருந்தது ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த விடுதலைப் புலிகளின் படை வீரர்களின் புகைப்படம்.
இந்த புகைப்படத்தை, சில சமூக வலைதள வாசிகள் மத்திய ரிசர்வ் படை வீரர்களின் புகைப்படம் எனக்கூறி சமூக வலைதளத்தில் வைரலாக்கினார்கள். இதையறியாத மக்கள் அதனைப் பேனர் அடித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் செய்திகள் ஒளிப்பரப்பட்டது.
இவ்வாறு சமூக வலைதளவாசிகள் வரம்புமீறி பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதுசெயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சைபர் கிரைம் போலீஸார் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுகுறித்து சிறிதும் கவலைப்படாத சமூகவலைதள வாசிகள் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...