Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாகனத்தை அக்கு அக்காக பிரித்து போட்டாலும் கண்டுபிடித்துவிடலாம்: திருட்டை தடுக்கும் புதிய டெக்னாலஜி!
வாகனத்தை அக்கு வேர் ஆணி வேரென தனியாக தனியாக பிரித்து விற்றாலும், எந்த பாகம் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் மைக்ரோ டாட் தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. திருடப்படும் வாகனங்களைக் கண்டுபிடிக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்திற்கு இந்தய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் வாகன திருட்டு என்பது ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்துவருகிறது. இதனைத் தடுக்க முடியமால் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்த சூழலில், வாகனத் திருட்டைத் தவிர்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்பங்கள் ஏற்கனவே உபயோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் சில நொடிகளில் தகர்த்தெறிந்து, வாகனத்தைக் கொள்ளையடிக்கும் திருடர்கள் ஊருக்குள் வளம் வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோன்று அவலத்தைத் தவிர்க்கும் விதமாக தற்போது ஓர் புதிய தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மைக்ரோ டாட் எனப்படும் புதிய தொழில்நுட்பம் அமலுக்கு வரவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தினால் வாகன திருடர்கள் அதன் துரும்பைக்கூட அசைக்க முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பானது மைக்ரோடாட் தொழில்நுட்பம்.
மைக்ரோ டாட் தொழில்நுட்பமானது, லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்ட சிறு சிறு புள்ளிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த புள்ளிகளில் வாகனங்களுக்கான தனிப்பட்ட எண் மற்றும் வாகன அடையாள எண் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த மைக்ரோ லேசர் டாட்களை வாகன கூட்டின் மீது பெயிண்டைப் போன்று ஸ்பிரே செய்யப்படும். அதேபோன்று எஞ்ஜின் உள்ளிட்ட மற்ற பாகங்களிலும் இந்த மைக்ரோ டாட்கள் ஸ்பிரே செய்யப்படும். லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த மைக்ரோ புள்ளிகளை அவ்வளவு எளிதாக நீக்கிவிட முடியாது. மேலும், இந்த டாட்களை அல்ட்ரா வைலட் விளக்கினைக் கொண்டு மட்டுமே காண முடியும்.
இந்த மைக்ரோ டாட்கள் கார் எந்த நிலையில் இருந்தாலும் எளிதில் கண்டுபிடிக்க உதவும். அதன்படி, காரின் பாகங்கள் தனிதனியாக பிரித்து கழட்டிப்போட்டிருந்தாலும், எந்த பாகம் எந்த இடத்தில் உள்ளது என்ற தகவலை எளிதில் பெற்றுவிடலாம். இந்த தொழில்நுட்பத்தை வைத்து அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் காணமல் போன வாகனங்களை எளிதில் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொழில்நுட்பத்தை வாகனங்களில் பயன்படுத்துவது குறித்து அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதுகுறித்து பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களுடான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தற்போது ஆண்டி தெஃப்ட் மைக்ரோ டாட்களை வாகனங்களில் பயன்படுத்தாலம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சிஎம்விஆர்-டிஎஸ்சி என்ற உயர்ந்த உந்தூர்தி தொழில்நுட்ப தகுதிநிலை அமைப்பான மத்திய மோட்டார் வாகன விதிகள் தொழில்நுட்ப நிலைக்குழுவின் அனுமதியினை பெற உள்ளது. மேலும், இதற்கான நார்ம்ஸையும் இந்த அமைப்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தயார் செய்ய இருக்கின்றது.
இதுகுறித்த போக்குவரத்துத்துறை அமைச்சகம் அதிகாரி கூறியதாவது, "இந்த தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வு கடந்த மாதம் நிறைவு பெற்றது. அதில், இந்த மைக்ரோ டாட் தொழில்நுட்பத்தை வாகனங்களில் பயன்படுத்தலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிஎம்விஆர்-டிஎஸ்சி நார்ம்ஸின்படி, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதனை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இந்த தொழில்நுட்பமானது ஆயிரம் ரூபாயிற்கும் குறைவானது. ஆகையால், ஆரம்பத்தில் ஆப்ஷன் முறையில் பயன்படுத்த கூறப்பட்டுள்ளது" என்றார்.
மைக்ரோ டாட்கள் 0.5மிமீ அளவு கொண்டது. இதில், வாகனம் குறித்த தகவல் மற்றும் தனிப்பட்ட அடையாள எண் ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கும் அல்லது வாகனத்தின் அடையாள எண் பொருத்தப்பட்டிருக்கும். இது வாகனம் திருடப்பட்டிருக்கும்போது கண்டுபிடிக்க உதவும். இந்த தொழில்நுட்பத்தை தெற்கு ஆப்பிரிக்கா கடந்த 2012ம் ஆண்டு முதலே அமல்படுத்தி வருகிறது. இதனால் ஆயிரம் கணக்கான காணமல் போன கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 2017-18ம் ஆண்டில் மட்டும் சுமார் 2.5 கோடி வாகனங்கள் நாடு முழுவதும் விற்பனையாகி உள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக அனைத்து மாநில வாகனங்களைச் சேர்த்தும் 22 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியா ஒரு வாகனத்திற்கான மிகப் பெரிய சந்தையாக இருந்து வருகிறது. இத்தகைய ஒரு நாட்டில் மைக்ரோ டாட் போன்ற தொழில்நுட்பத்தின் பயன்பாடு வரவேற்தக்கது என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!