Just In
- 11 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 3 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...
டோல்கேட் டிராபிக் ஜாமில் 15 நிமிடமாக சிக்கி கொண்ட அமைச்சர், வாகனங்கள் அனைத்தும் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் செயலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
டோல்கேட் டிராபிக் ஜாமில் 15 நிமிடமாக சிக்கி கொண்ட அமைச்சர், வாகனங்கள் அனைத்தும் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் செயலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் அமைச்சர் போன்ற விஐபிக்கள், இதுபோன்று பட்டால்தான் சாமானியர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்வார்கள் போல. இதுகுறித்த விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை டோல்கேட். இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று டோல்கேட்களில் நடைபெறும் கட்டண கொள்ளை. எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல், டோல்கேட்களில் மிக அதிக அளவிலான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
2வது காரணம், நீண்ட க்யூ. டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி செல்வதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பது வழக்கம். அதுவும் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களை ஒட்டியுள்ள டோல்கேட்களில் சிக்கி கொண்டால், அவ்வளவுதான்.
வேண்டா வெறுப்பாக செலுத்தும் கட்டணத்தை கூட கொடுத்து விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். கட்டணத்தை செலுத்தி விட்டு, டோல்கேட்டை கடக்க நீண்ட நேரம் பிடிக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதன் மூலம் மிச்சம்பிடிக்கப்பட்ட அத்தனை நேரத்தையும் இழக்க நேரிடுகிறது.
இதனிடையே ஹரியானா மாநில அமைச்சராக உள்ள விபுல் கோயல் என்பவர், டோல்கேட்டில் ஏற்பட்ட அத்தகைய டிராபிக் ஜாமில், சுமார் 15 நிமிடங்கள் சிக்கி கொண்டார். இதனால் அவர் செய்த காரியம், வாகன ஓட்டிகளிடம் இருந்து அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மனோகர் லால் கட்டார் முதல் அமைச்சராக உள்ளார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்தான் விபுல் கோயல். அங்குள்ள பத்ராபூர் டோல்கேட்டில் ஏற்பட்ட டிராபிக் ஜாமில்தான் விபுல் கோயல் சிக்கி கொண்டார்.
அமைச்சர் விபுல் கோயல் வந்த சமயத்தில், நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பொதுவான பிரச்னையாக டிராபிக் ஜாம் உள்ளது.
இதனிடையே டிராபிக் ஜாம் சம்பவத்தால் வெறுத்து போன அமைச்சர் விபுல் கோயல், தனது காரில் இருந்து இறங்கி விட்டார். அம்மாநில போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் அவருக்கு பாதுகாப்பாக வந்திருந்தன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி விறுவிறுவென டோல்கேட்டை நோக்கி அவர் நடந்து சென்றார்.
பின்னர் டோல்கேட்டின் ஒவ்வொரு கண்ட்ரோல் அறை முன்பாகவும் இருந்த பூம் பேரியர்களை திறந்து விட அமைச்சர் விபுல் கோயல் உத்தரவிட்டார். இதனால் நீண்ட நேரமாக நின்றிருந்த வாகனங்கள் அனைத்தும், கட்டணம் செலுத்தாமல் இலவசமாக டோல்கேட்டை கடந்து சென்றன.
டிராபிக் க்ளியர் ஆக வேண்டும் என்பதற்காக அமைச்சர் விபுல் கோயல் இதனை செய்தார். அத்துடன் அங்கு சிறிது நேரம் நின்று, வாகனங்கள் அனைத்தும் இலவசமாக டோல்கேட்டை கடந்து செல்வதையும் அவர் பார்த்து கொண்டிருந்தார்.
பொதுவாக அமைச்சர்கள் மற்றும் விஐபிக்களுக்கு டோல்கேட்களில் ஸ்பெஷல் லேன் வழங்கப்படும். அத்தகைய நபர்களின் கான்வாய் கட்டணம் எதுவும் செலுத்தாமல், ஸ்பெஷல் லேன் மூலமாக டோல்கேட்டை கடந்து செல்லலாம்.
ஆனால் பத்ராபூர் டோல்கேட் சிஸ்டமில் எதிர்பாராதவிதமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சரிடம், டோல்கேட் ஊழியர் அதை விவரிக்கவும் செய்கிறார். இதனால்தான் அமைச்சரும் கூட டிராபிக் ஜாமில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் எவ்வளவு நேரம், அப்படி வாகனங்கள் அனைத்தும் இலவசமாக டோல்கேட்டை கடக்க அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எது எப்படியோ, அந்த சமயத்தில் டோல்கேட்டை கடந்த வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். அந்த வீடியோவை கீழே காணலாம்.
எனினும் அமைச்சர்கள் போன்ற விஐபிக்களுக்கு, இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்தால்தான், சாமானிய மக்களின் வலி புரியும் போல. அமைச்சர் விபுல் கோயலும் கூட, நேரடியாக பாதிக்கப்பட்டதால்தான், வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல உத்தரவிட்டார்.
இந்த சமயத்தில் டோல்கேட்கள் தொடர்பான சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை கடந்து சென்று விட்டால், இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று பலர் பேசி கொள்கின்றனர்.
ஆனால் அப்படியான விதி எதுவும் இல்லை. அது வெறும் புரளிதான். கார்களுக்கு இலவச அனுமதி வழங்க சட்ட புத்தகத்தில் இடம் இல்லை என்பதை அரசு ஏஜென்சிகளான MORTH (Ministry for Road Transport and Highways), NHAI (National Highway Authority of India) ஆகியவை உறுதிபடுத்தியுள்ளன.
இதனிடையே டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் எடுத்து கொள்வதை தவிர்க்கும் வகையில், பாஸ்ட் டேக் முறை நாடு முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!