Just In
- 23 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டிரக்குக்கும் காருக்கும் அடியில் சிக்கிய சூப்பர் கார்: நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்!
அதிபயங்கர விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர், சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் வாகனங்களால் நாடு முழுவதும் உள்ள சாலைகள் பெரும் போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வருகின்றன. இதனை சீரமைக்க அரசும், அரசு அதிகாரிகளும் கடுமையான சவாலைச் சந்தித்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வைக் காண்பது என்பது, கடலில் தொலைத்த ஊசியைப் போன்று உள்ளது.
இதுபோன்ற சூழலை தான் தற்போது உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதிகரித்து வரும் மக்கள் தொகை இருக்க, மறுபுறம் அதனால் உருவாகும் பின்விளைவுகள் என பல்வேறு சிக்கல்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
அதில், ஒன்று தான் நாளுக்கு அதிகரித்து வரும் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளும். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 821 பேர் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு மணி நேரத்துக்கு 34 பேர் என்றும், வருடத்துக்கு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
இதில், பெரும்பாலும் குடிபோதையில் வாகனங்களை இயக்குவர்களே அதிகமாக உள்ளனர். மேலும், முறையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, செல்போனை உபயோகித்தவாறு வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் அடங்கும்.
விபத்தில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக, அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அவர்களது போக்கிலேயே செயல்பட்டு, அசதாரணமாக விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். அதற்கான பலன்களையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரமான விபத்து ஒன்றில் இருந்து வாகன சாரதிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். பென்சில்வேனியா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த விபத்தின் கோர காட்சியானது, பலரது உயிரை பலி வாங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும்.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது விலையுயர்ந்த கூப் ரக காரில் புறப்பட்டுள்ளார். அவர் சென்றுக்கொண்டிருந்த சாலையானது அதிகம் பிஸியானது. இந்த நிலையில் அவருக்கு முன்னால் ஒரு எஸ்யூவி ரக போர்ட் காரும், பின்னால் சரக்கு ஏற்றிச்செல்லும் டிரக் லாரியும் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, சரக்கு லாரியை இயக்கி வந்த ஓட்டுநர், தனக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தைப் போக்குவதுக்காக தேநீர் அருந்தியுள்ளார். அந்த நேரத்தில் முன்னாடிச் சென்றுக்கொண்டிருந்த கூப் கார் திடீரென சாலையில் நின்றுள்ளது. இதைசற்றும் அறியாத டிரக் ஓட்டுநர் கூப் காரின் மீது மோதி வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
இதில், அப்பளம் போல் நொருங்கிய கூப் கார், இரு வாகனங்களுக்கும் அடியில் சிக்கியது. முன் பகுதி போர்ட் காரின் பின் பகுதியிலும், பின் பகுதி சரக்கு லாரியின் அடியிலும் சிக்கியது. இந்த கடுமையான விபத்தில், எந்தவொரு கோரச் சம்பவமும் அதிர்ஷ்டவசமாக நடைபெறவில்லை.
மேலும், போர்ட் காரில் வந்த ஓட்டுநர் சிறு காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், பயங்கரமான சேதத்தை சந்தித்த கூப் காரின் ஓட்டுநர் சிறு சிறு சிராய்ப்பு காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார்.
இதைத்தொடர்ந்து, ரெஸ்கியூ செய்ய வந்த போலீஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, சரக்கு லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!