Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நோயாளிக்கு பதிலாக கல்லூரி மாணவிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்..!! (வீடியோ இனைப்பு)
நோயாளிக்கு பதிலாக கல்லூரி மாணவிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்..!! (வீடியோ இனைப்பு)
வாகன உலகில் நடக்கும் உடனுக்குடன் நிகழ்வுகளை மட்டுமல்ல, அந்த துறையில் நடக்கும் முறைகேடுகளை தருவதிலும் டிரைவ்ஸ்பார்க் தனித்து நிற்கிறது.
அந்த வகையில் நீங்கள் கீழே பார்க்கும் செய்தியில், அவசர கால ஊர்தி ஒன்று தவறாக பயன்படுத்தப்பட்ட சம்பவத்தை ஆதாரங்களுடன் படிக்க உள்ளீர்கள்.
அவசர ஊர்திகள், புரியும்படி சொல்லவேண்டும் என்றால் ஆம்புலன்ஸ் வாகனங்கள், உடல்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில், சமீப காலங்களில் ஆம்புலன்ஸின் சைரன் ஒலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றன.
உடல்நிலை குன்றியவர்களுக்கு மட்டும் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தற்போது மற்ற தேவைகளுக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் செய்திகளை தினமும் கடந்து வருகிறோம்
இதனால் சாலையில் நாம் கடக்கும் ஒவ்வொரு அவசர ஊர்திகள் பற்றிய நிலை, நமக்கு சந்தேகத்தை எழுப்புவது சமீபகாலங்களில் தவரிக்க முடியாத ஒன்று.
கர்நாடகாவின் பெங்களூரு நகரத்தில் சாலையில் இடையூறு ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் ஒன்று முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்தது அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது.
பெங்களூரின் மல்லேஷ்வரம் பகுதியில் சென்றுகொண்டு இருந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்று, முறைகேடாக இயக்கப்பட்டு வருவதாக அப்பகுதி போலீசாருக்கு புகார் வந்தது.
இதை அடுத்து, அந்த ஆம்புலன்ஸை விரட்டி பிடித்த காவல்துறையினர், ஓட்டுநரையும், அதில் பயணித்த மூன்று இளம் பெண்களையும் சிறைப்பிடித்தனர்.
அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூன்று இளம் பெண்களும் கல்லூரி தேர்விற்காக சென்று கொண்டு இருந்ததாகவும், நேரம் கடந்து விட்ட காரணத்தினால் ஓட்டுநரின் யோசனை பேரில் தேர்வு மையத்திற்கு ஆம்புலன்ஸில் பயணித்ததும் மாணவிகள் கூறினர்.
தேர்வு மையத்திற்கு அவசரமாக செல்லவேண்டி இருந்தால், எதற்காக ஆம்புலன்ஸில் சைரன் ஒலியை எழுப்ப வேண்டும் என்று பெங்களூரு போலீசார் ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பினர்.
நர்ஸிங் கல்லூரி மாணவிகளான அந்த மூன்று இளம் பெண்களின் நடவடிக்கைக்கும், ஓட்டுநர் அவசர ஊர்தியை தவறாக பயன்படுத்தியதற்கும் போலீசார் கடும் எச்சரிக்கை செய்தனர்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவிகள் மீதும் வழக்கு பதியப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் நடந்த சமயத்தில் பொதுமக்கள் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தற்போது வைரலாக பரவி வருகிறது.
சேவையை கூட இன்று சுயநல தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்கள் அதிகளவில் பெருகிவிட்ட நிலையில்,
அவசர ஊர்தியின் மீது கூட இன்று பொதுமக்களுக்கு சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாத நிதர்சனங்களில் ஒன்று.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!