Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூப்பர் சிஎம்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அருமையான முடிவு... பொதுமக்களிடம் குவியும் பாராட்டு!
தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூப்பரான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் காரில் பயணம் செய்யும்போது, கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வரும். அரசியல் தலைவர்களின் கான்வாய் அணிவகுத்து வரும்போது, போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கான்வாய் வாகனங்கள் கடந்து செல்லும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் வெகு சமீபத்தில் நீதிபதி ஒருவரே இதன் காரணமாக பாதிக்கப்பட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி, சென்னை அடையாறு பகுதியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் சமீபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தால், போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது நிறைய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனமும் ஒன்று.
இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தனது வாகனம் நிறுத்தப்பட்டது தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதன்பேரில் உள்துறை செயலாளர் பிரபாகர் காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அப்போது அவரிடம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ''எதன் அடிப்படையில் 25 நிமிடம் தடுத்து நிறுத்தினீர்கள்? நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்'' எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற சம்பவத்திற்கு உள்துறை செயலாளர் வருத்தம் தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது எனவும் அவர் உறுதியளித்தார். இந்த சூழலில், தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின் பேரில், தற்போது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணங்களின்போது, அவருடன் பயணிக்கும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை 12 ஆக இருந்து வந்தது.
இந்த எண்ணிக்கை தற்போது வெறும் 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாயில் 12 வாகனங்களுக்கு பதிலாக 6 வாகனங்கள் மட்டுமே வரும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணங்களின்போது, பொதுமக்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இந்த முடிவிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் நாடு முதல் அமைச்சராக பதவியேற்றது முதலே தனது அதிரடியான அறிவிப்புகள் மூலம் மு.க.ஸ்டாலின் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வரிசையில் அவரது இந்த முடிவும் பொதுமக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முடிவு விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படாது என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
நாங்கள் ஏற்கனவே தெரிவித்தபடி அரசியல் தலைவர்களின் பயணங்களின்போது, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்து வந்தது. சில சமயங்களில் மணிக்கணக்கில் கூட பொதுமக்கள் காத்திருக்கும் நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இனி வரும் காலங்களில் தமிழ் நாடு முதல் அமைச்சரின் கான்வாயால் பொதுமக்கள் சிரமப்பட மாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!