மெர்சிடிஸ் போல மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட காரை உரிமையாளர் கண்முன் உறித்துப்போட்ட கேரள போலீஸ்..!!
மெர்சிடிஸ் போல மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட காரை உரிமையாளர் கண்முன் உறித்துப்போட்ட கேரள போலீஸ்..!!
கேரளாவில் மெர்சிடிஸ் ஏ கிளாஸ் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள மாருதி பலனோ கார் சர்சையில் சிக்கியுள்ளது.
இதனால் அந்த காரை வைத்திருக்கும் உரிமையாளருக்கு கேரள காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அட்டகாசமாக, கண்ணை பறிக்கக்கூடிய பல கார் மற்றும் பைக்குகளின் மாடிஃபிகேஷன் பணிகளை பார்த்து நாம் மெய் சிலிர்த்திருப்போம்.

அந்தவகையில் மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் மாடல் போல மாருதி பலேனோ கார் ஒன்று மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

மேலும் பலேனோ காரில் இருக்கும் அலாய் சக்கரங்களை நீக்கிவிட்டு, ஆட்டோ ஸ்பேர்ஸ் சந்தைகளில் கிடைக்கும் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக காணப்படும் இந்த மாடிஃபிகேஷன் பணிகள், மாருதி பலேனோ காரை, சாட்சாத் மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் மாடல் தான் என பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கிறது.

குறிப்பாக இந்த பலேனோ காரின் பம்பர், தற்போதைய ஏ-கிளாஸ் காரில் கிடைக்கும் எண் 8 வடிவிலான ஏர் வென்டுகளை பெற்றிருப்பது தான் உச்சக்கட்டம்.
Recommended Video


இதுதவிர இதன் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குவாடு எக்ஸாஸ்ட் பைப் மற்றும் டிஃப்யூஸர் உடன் கூடிய பம்பர் என மெர்சிடிஸ் ஏ கிளாஸ் காரை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் சந்தையில் இருந்து 16-இஞ்ச் அளவுடன், 5 ஸ்போக்குகளை பெற்ற அலாய் சக்கரங்கள் இந்த பலேனோ காரில் மாட்டப்பட்டுள்ளன.

காரின் உள்கட்டமைப்புகளையும் மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் தரத்திற்கு மாற்ற அதன் உரிமையாளர் முயன்றுள்ளார். ஆனால் அதில் அவருக்கு கொஞ்சம் தான் பயனளித்துள்ளது.

பிரபலமான ஒரு காரை மாடலை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடிஃபிகேஷன் பணிகளை எதிர்த்து கேரள போக்குவரத்து ஆணையரிடம் சமீபத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கிடைக்கப்பெற்ற அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் அந்த பலனோ கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஆர்.டி.ஓ , கேரள காவல்துறை உதவியுடன், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மாருதி பலேனோ காரை தங்களிடம் ஒப்படைக்க, அதன் உரிமையாளருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள கார் உரிமையாளர், மாடிஃபிகேஷன் பணிகளை நீக்க குறைந்தது 15 நாட்கள் அவகாசம் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் மோட்டார் வாகன சட்டம் இதற்கான நடைமுறைகளில் கடுமையாக இருப்பதன் காரணமாக, உரிமையாளரின் பதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பிறகு பலேனோ காரில் செய்யப்பட்ட அனைத்து மாடிஃபிகேஷன் பணிகளையும் கழட்டி ஆர்.டி.ஓ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட உதிரிபாகங்களை ஆராய்ந்து, பலேனோ கார் உரிமையாளர் செலுத்த வேண்டிய அபாரதத் தொகை கணக்கிட்டு பெறப்படும் என தெரிவித்துள்ளனர்.

காரின் கட்டமைப்புகளில் ஏதாவது மாற்றம் செய்தால் மட்டுமே, ஆர்.டி.ஓ அதிகாரிகளிடம் அதற்கு வேண்டி நாம் அனுமதி பெற முடியும்.
ஆனால், கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் காரின் மொத்த அழகியலுமே பின்பற்றப்பட்டுள்ளது.

கார்கள் மற்றும் பைக்குகள் மீது மாடிஃபிகேஷன்களை மேற்கொள்ள விரும்புபவர்கள், மோட்டார் வாகன சட்டம் சொல்லும் ஷரத்துகளை ஆராய்ந்து விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்குவது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications








