ஃபெராரி போல மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மிட்சுபிஷி லேன்சர் கார்... ஆப்பு வைத்து அனுப்பிய கேரள காவல்துறை
ஃபெராரி போல மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மிட்சுபிஷி லேன்சர் கார்... ஆப்பு வைத்து அனுப்பிய கேரள காவல்துறை..!!
சமீபத்தில் மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் போல மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மாருதி பலேனோ காரை உரிமையாளர் கண்முன்னே கேரள போலீசார் உடைத்து போட்டனர்.

இந்திய ஆட்டோதுறையில் பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் அடங்குவதற்குள், மீண்டும் கேரளாவில் மிட்சுபிஷி லேன்சர் கார் ஒன்று மாடிஃபிகேஷன் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஃபெராரி போல மாற்றம் செய்யப்பட்ட அந்த லேன்சர் காரை கேரளாவின் மலப்புரம் பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கைப்பற்றியுள்ளதாக மனோரமா ஆன்லைன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மிட்சுபிஷி லேன்சார் கார் பார்ப்பதற்கு ஃபெராரி போல இருக்கிறதா என்பது உறுதியாக சொல்ல முடியவில்லை.
இருந்தாலும், ஃபெராரியின் தயாரிப்பில் காணப்படும் சில தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

குறைந்த விலை சந்தையில் வாங்கப்பட்ட ஃபெராரி கார் முன்பக்க பம்பர், ரியர் பம்பர், ஏர் டிஃப்யூஸர், வென்டுடன் கூடிய ஹூடு, ரியர் ஸ்பாய்லர் மற்றும் எக்ஸாஸ்ட் பைப் என
Recommended Video


ஃபெராரி கார்களின் காணப்படும் சில தோற்றப்பொலிவுகள் இந்த மிட்சுபிஷி லேன்சார் காரில் அட்சுபிசகாமல் கட்டமைக்கப்பட்டுள்ளன. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
Trending On Drivespark:

இந்த லேன்சர் காரில் ஃபெராரி தோற்றம் தரும் அனைத்து அம்சங்களையும் 15 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என மலப்புரம் ஆர்.டி.ஓ அலுவலகம் உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவை மீறும் வகையில் எதாவது செய்தால், காரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மலப்புரம் ஆர்.டி.ஓ அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 52-ன் படி, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அனுமதியில்லாமல் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனத்தை உரிமையாளர்கள் பயன்படுத்தக்கூடாது.

இந்த விதியின் கீழ் தான் கேரளாவின் மலப்புரம் ஆர்டிஓ அதிகாரிகள் ஃபெராரி-யாக மாற்றம் செய்யப்பட்ட இந்த மிட்சுபிஷி லேன்சர் காரை கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து இந்த மோட்டார் வாகன சட்டம் அடிப்படையில் தான் லேன்சர் கார் உரிமையாளருக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உத்தரவுகளும் பிறக்கப்பட்டுள்ளன.

மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகம். அதிலும் குறிப்பாக மெர்சிடிஸ், ஆடி மாடல்களை போல சாதாரண கார்கள் மாற்றப்பட்டு, பயன்படுத்துவது அங்கு அதிகரித்து வருகிறது.

வர்த்தக முத்திரை மற்றும் வடிவமைப்பு மோசடி தொடர்பாக பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தந்த அழுத்தத்தினால் மாடிஃபிகேஷன் கார்கள் வைத்திருப்போரை தேடிபிடித்து விசாரித்து வருகிறது கேரள காவல்துறை.

தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகளை கடுமையாக்கப்பட்டு, கார் மற்றும் பைக் மாடிஃபிகேஷன் தொடர்பான நடைமுறைகளை கட்டுப்படுத்த கேரள அரசு சில உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source:Manorama Online


Click it and Unblock the Notifications








