84 ஆயிரம் பேர் கூண்டோடு சிக்கினர்... ஆர்டிஓ அதிரடியால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் வாகன ஓட்டிகள்
84 ஆயிரம் பேர் கூண்டோடு சிக்கியுள்ளதால், தவறு செய்யும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக கடைபிடிப்பதே கிடையாது. செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இப்படிப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களால் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடுகின்றன. இதுதவிர ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது போன்ற போக்குவரத்து விதிமுறைகளையும் பலர் கடைபிடிப்பது இல்லை.

இதுபோன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாததன் காரணமாக சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்திய சாலைகளை உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக மாற்றி வைத்துள்ளன.

இந்திய வாகன ஓட்டிகள் செய்யும் மற்றொரு முக்கியமான தவறு குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது. இந்திய சாலைகளில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையாக இது உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் 30 மில்லி கிராம் ஆல்கஹால் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆல்கஹால் அளவு இதற்கு மேலே சென்றால், போலீசாரால் உங்களது டிரைவிங் லைசென்ஸை பறிமுதல் செய்ய முடியும். இந்த சூழலில் கடந்த 2016 முதல் 2018ம் ஆண்டு வரை கர்நாடகாவில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களால் ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

ET Auto வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், மொத்தம் 83,690 டிரைவிங் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியதற்காக ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ்களின் எண்ணிக்கை மட்டுமே 59,797 என்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டிய குற்றத்திற்காக கடந்த 2016ம் ஆண்டில் 12,151 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2017ம் ஆண்டில் 14,881 ஆகவும், 2018ம் ஆண்டில் 32,765 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆக மொத்தத்தில் 3 ஆண்டுகளில் 59,797 பேரின் டிரைவிங் லைசென்ஸ் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. குடிபோதை தவிர வேறு சில காரணங்களுக்காகவும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

இதில், ஓவர் ஸ்பீடு, செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்குவது, சீட் பெல்ட் அணியாதது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது ஆகியவை முக்கியமான காரணங்கள்.

அத்துடன் சிகப்பு விளக்கு எரிவதை பொருட்படுத்தாமல் டிராபிக் சிக்னலை கடந்து செல்வது, அதிக அளவு சரக்குகளை வாகனங்களில் ஏற்றி செல்வது ஆகிய காரணங்களுக்காகவும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில், குடிபோதையில் வாகனங்களை இயக்கியவர்களின் டிரைவிங் லைசென்ஸ் மட்டும், அவர்கள் முதல் முறை சிக்கியபோதே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற குற்றங்களை செய்வதவர்களுக்கு முதல் முறை எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக மீண்டும் அதே குற்றத்தை செய்திருந்தால் மட்டுமே, அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குடிபோதையில் வாகனம் இயக்குபவர்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் மிக கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்தியாவில் சமீப காலமாக அது தொடர்பான சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து போலீசாரும் கூட அதனை மிக கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால்தான் குடிபோதையில் வாகனங்களை இயக்குவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

breathalyzer மூலமாக வாகன ஓட்டிகளின் உடலில் உள்ள ஆல்கஹால் அளவு கணக்கிடப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் ஒருவர் சோதனைக்கு மறுத்தால், போலீசார் அவரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த மாதிரியை எடுக்கின்றனர். இதன் மூலம் ஆல்கஹால் அளவு மதிப்பிடப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








