Just In
- 26 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 2 hrs ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சாலைகளை புதுப்பிக்கும்போது கட்டாயம் இதை கடைப்பிடிக்கணும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!
இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பல நூறு கீமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டிருப்பதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழன் அன்று பராளுமன்றத்தில் உரையாற்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி, "இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 703 கிமீட்டருக்கு சாலை அமைத்திருப்பதாக" கூறினார். இது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
கடந்த வியாழன் அன்று பராளுமன்றத்தில் உரையாற்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி, "இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 703 கிமீட்டருக்கு சாலை அமைத்திருப்பதாக" கூறினார். இது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
இந்த உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் கழிவுகள் மாறியிருக்கின்றன. பல மெட்ரிக் டன்கள் அளவில் கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேர்ந்து வருகின்றன. இவை மலைபோல் குவிந்து வருகின்றன. இது உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஓர் நிலையாகும்.
இந்த மாதிரியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. இதனடிப்படையில், இந்தியா பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலையை அமைத்திருக்கின்றது.
இத்துடன், இனி வரும் காலங்களில் புதுப்பிக்கப்படும் சாலைகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது என அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கின்றார். இதுகுறித்த அறிவிப்பு எழுத்து பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
சாலை அமைப்பதற்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது கட்டாயமாக்கியிருப்பதால் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிளாஸ்டிக் 6-8 என்ற சதவீதத்தில் சாலை போட பயன்படுத்தப்படுகின்றது. மீதம் 92-98 சதவீதம் என்ற அளவிலேயே பிடுமென் (bitumen) பயன்படுத்தப்படும்.
2016ம் ஆண்டு அமைச்சர் நிதின் கட்காரி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகளை உருவாக்க இருப்பதாக அவர் கூறியிருந்தார். இதனடிப்படையில், இதுவரை 11 மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமின்றி பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பிற பயன்பாட்டு பொருட்களை தயாரிக்கும் பணியிலும் ஒன்றிய அரசு களமிறங்கியிருக்கின்றது. ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அறிக்கையின்படி, இந்தியாவில் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் 2018-19 ஆம் ஆண்டில் சேர்ந்ததாகவும், இது ஒரு நாளைக்கு சுமார் 9,200 டன் ஆகும்.
இத்தகைய சூழ்நிலையிலேயே மலை போல் குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகலை மறு பயன்பாடு செய்யும் வகையில் பிளாஸ்டிக்கால் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேலையில் நாள் ஒன்றிற்கு 36.5 கிமீ எனும் வீதத்தில் சாலைகள் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
மிகக் குறிப்பாக, உலக சாதனை படைக்கும் வகையில், 2.5 கிமீ நான்கு வழி சாலையை வெறும் 24 மணி நேரத்திலும், 26 கிமீ ஒற்றை வழி பாதையை வெறும் 21 மணி நேரத்திலும் உருவாக்கி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.