Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாலை விபத்துக்களில் காயமடைபவர்களுக்கு உடனடி சிகிச்சை... புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு...
சாலை விபத்துக்களில் காயம் அடைபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சாலை விபத்துக்களில் சிக்கி காயம் அடைபவர்களுக்கு, உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது ஈடுபட்டு வருகிறது.
விபத்து நடைபெறும் பட்சத்தில், உடனடியாக காவல் துறை மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் கிடைக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய அதிநவீன திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் தயாராக இருப்பது இந்த புதிய திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்படும். சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருவதை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமனே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''காவல் துறை, ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவமனைகள் ஒரே நெட்வொர்க்கின் மூலமாக இணைக்கப்பட்டால், சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க முடியும்'' என்றார். இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
உலகிலேயே சாலை விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. சாலை விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்க தவறுவதும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக, இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை உயர்த்தியிருப்பதை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம்.
புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 3.86 சதவீதம் குறைந்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்துடன் இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் போன்ற பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வாகனங்களில் இடம்பெறுவதை கட்டாயமாக்கி வருவதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதன் மூலம் வாகனங்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளுடன், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றினால் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!