Just In
- 13 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க இத செய்யுங்க! பாஜக அமைச்சர் சர்ச்சை பதில்! கோபப்படாதீங்க ப்ளீஸ்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுகுறித்த கேள்விக்கு மபி பாஜக அமைச்சர் சர்ச்சையான பதில் அளிதித்ருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகின்றது. குறிப்பாக, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலையால் பெட்ரோல் விலை மட்டுமின்றி டீசலின் விலையும் நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் ரூ. 100ஐ தொட தொடங்கியிருக்கின்றது.
ஏற்கனவே பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தொட்டதை அடுத்து டீசல் விலையும் 100ஐ கடக்கும் நிலை உருவாகியிருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தினசரி வாகனங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெட்ரோல், டீசல் விலையுயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
பலர் எரிபொருள் விலையுயர்வு காரணமாக காரில் இருந்து இருசக்கர வாகன பயன்பாட்டிற்கும், பைக்கில் இருந்து மிதிவண்டி பயன்பாட்டிற்கும் மாற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தின் எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமன் சிங், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சையான பதில் ஒன்றைக் கூறியிருக்கின்றார்.
அது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர், பெட்ரோல்-டீசல் விலையுயர்வுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கின்றநிலையில், "மக்களை வெளியில் செல்ல மிதிவண்டிகளைப் பயன்படுத்துமாறு" அறிவுறுத்தியிருக்கின்றார்.
"மிதிவண்டி பயன்பாடு அவர்களின் உடல் நலத்திற்கு நலனையும், செலவைக் குறைக்கவும் வழிவகுக்கும். அத்துடன், சுற்றுச் சூழலுக்கும் ஆரோக்கியமானது" என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, "அதிக வரியாக வசூலிக்கப்படும் தொகை, நாட்டின் ஏழை மக்களின் நலனுக்காக பயன்படுத்தவதாக" பிரதுமன் சிங் கூறியிருக்கின்றார்.
விலையுயர்வை நியாயப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என அம்மாநில எதிர்கட்சிகள் பதில் கருத்து தெரிவித்திருக்கின்றன. பிரதுமன் சிங் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இதுபோன்ற பாஜகவைச் சேர்ந்தவர்கள் சர்ச்சையான பதிலைக் கூறுவது முதல் முறையல்ல.
இதற்கு முன்னதாகவும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் விநோதமான பதில்களை எல்லாம் கூறியிருக்கின்றனர். அதிகப்படியாக உயர்ந்து வரும் எரிபொருள் விலையுயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையுயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையையும் கடுமையாக உயர்த்தி வருகின்றது.
இதன் விளைவாக ஏழை மற்றும் எளிய மக்கள் அதிகமாக பாதிப்படைய தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், "தற்போதைய எரிபொருள் விலை உயர்வு மக்களுக்கு சிக்கலானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு 35,000 கோடிக்கும் மேல் தடுப்பூசிகளுக்கு செலவிட்டிருக்கின்றது. இத்தகைய மோசமான காலங்களில் நலத்திட்டங்களுக்கு செலவிட பணத்தை மிச்சப்படுத்தி வருகிறோம்" என தெரிவித்திருந்தார்.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா