Just In
- 52 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தலை சுற்றவைக்கும் முகேஷ் அம்பானி கார் டிரைவரின் மாத வருமானம்
உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!!
முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இவரது மனைவி நீட்டா அம்பானியும் இந்தியாவில் பிரபலமான பெண் தொழிலதிபர். விளையாட்டு துறை சார்ந்த நடவடிக்கைகளில் நீட்டா அம்பானியின் பங்கு மிகப்பெரியது.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் முகேஷ் அம்பானியின் வாழ்க்கை ஆடம்பரத்தின் உச்சம்.
ஆனால் அந்த ஆடம்பரத்தை முகேஷ் அம்பானி பொது விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம் அவரிடம் பார்க்க முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் முகேஷ் அம்பானி ஆடம்பரங்களின் அரசன்.
தென் மும்பை பகுதியில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அன்டிலியா என்ற பிரம்மாண்ட வீடு, உலகளவில் இருக்கும் ஆடம்பரமான கட்டிடங்களில் ஒன்று.
மும்பையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீடு, தற்போது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாறி வருகிறது.
மொத்தம் 27 அடுக்குகள் கொண்ட முகேஷ் அம்பானியின் அன்டிலியா கட்டிடத்தில் சுமார் 6 தளங்கள் மட்டும் கார்களை நிறுத்துவதற்காகவே கட்டபட்டுள்ளது.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கார்கள், உலகின் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர மாடல்களாகும்.
வெறும் கார்களை பார்க்கிங் செய்யப்படும் தளங்களாக மட்டுமில்லாமல், அதற்கான மொத்த மெக்கானிசத்தையும் அன்டிலியா வீட்டின் அந்த 6 தளங்கள் பெற்றுள்ளன.
இங்கு முகேஷ் அம்பானி மட்டுமில்லை, அவரிடம் பணிப்புரியும் கார் ஓட்டுநர்கள் கூட நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்கள் தான்.
அதாவது எம்பிஏ படித்துவிட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் சம்பாதிக்கும் ஊழியர்களை விட,முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுநர்கள் வாங்கும் ஊதியம் மிக அதிகம்.
அதாவது மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஓட்டுநர்கள் வரை முகேஷ் அம்பானியிடம் பணிபுரிகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அவரது பிரத்யேக கார் ஓட்டுநருக்கு மற்றவர்களை விட அதிக ஊதியம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கார் ஓட்டுநர்களுக்கா இவ்வளவு ஊதியம் என நம்மில் பலருக்கு ஆதாங்கம் எழலாம். ஆனால் முகேஷ் அம்பானி வைத்திருக்கும் கார்களை ஓட்டுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
முகேஷ் அம்பானி வீட்டில் இருக்கும் கார்கள் பலவும் அதிக விலையுயர்ந்த மற்றும் நுணுக்கமான வேலைபாடுகளை கொண்ட தயாரிப்புகள்.
அவற்றில் ஏதாவது ஒரு கோளாறு ஓட்டுநரால் ஏற்படால், அதை சரிப்படுத்த லட்சம் லட்சமாக கொட்ட வேண்டும்.
குறிப்பாக ஒரு சில கார்களில் கோளாறு அல்லது கீறலோ விழுந்தால் கூட அது சரி செய்ய முடியாமல் கூட போகலாம்.
முகேஷ் அம்பானி மட்டுமில்லாமல், அவரது காரின் உயிரும் அதன் ஓட்டுநரின் கையில் தான் என்றால், அதற்கு ஏற்றவாறு ஊதியமும் இருக்க வேண்டாமா?
முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கான காரணங்கள்!
ஆசியாவின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் டிரைவருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளம் என்பதை கேட்டதுமே, பல ஆண்டுகள் விழுந்து விழுந்து படித்து எஞ்சினியர், டாக்டர் பட்டம் பெற்றவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பேசாம, முகேஷ் அம்பானிக்கு டிரைவராக கூட போய்விடலாம் என்று பலர் காது பட சொன்னார்கள். ஆனால், முகேஷ் அம்பானியிடம் டிரைவராக வேலைக்கு சேர்வது, லேசுபட்ட காரியம் அல்ல. அதற்கு பல்வேறு கடினமான முறைகள் கையாளப்படுகின்றன.
முகேஷ் அம்பானியிடம் பல நூறு கார்கள் இருக்கின்றன. அதனை இயக்குவதற்கு தேவைப்படும் ஓட்டுனர்களை தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தனியார் நிறுவனம்தான் முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுனர்களை தேர்வு செய்வதையும், கட்டுப்படுத்துவதுமான பொறுப்பை ஏற்றிருக்கிறது.
கார் ஓட்டுனரின் பின்புலம், கார் ஓட்டுவதில் அனுபவம், விலை உயர்ந்த கார்களை இயக்குவதில் அனுபவம் உள்ளிட்டவற்றில் சிறந்த ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன் பிறகு நேர்முக தேர்வில் மொழிப்புலமை, கார் ஓட்டும் அனுபவம், கார் பழுது நீக்கும் அறிவு குறித்து ஆய்வு செய்யப்படும்.
அதில், தேர்வு செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் கார்களை இயக்கும் முறை குறித்து ஆய்வு செய்யப்படுவர். பின்னர், அதில் சிறந்தவர்கள் அடையாளம் காணப்படும், அந்த ஓட்டுனருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அதன் பின்னரே, ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டு, அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்யப்படும். இந்த தேர்வுகளை தாண்டி, பணியிலும் சிறப்பாக இருப்பவர்கள் அடையாளம் காணப்படும், முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் பெறுவர். அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.
அதற்கு முன்பாக, முகேஷ் அம்பானி பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்களில் விசேஷ தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அந்த கார் நிறுவனம் அளிக்கும் பயிற்சிகளில் தேர்வு பெற வேண்டும்.
அவசர சமயத்தில் காரை கையாள்வது, அதிவேகத்தில் பின்புறமாக காரை செலுத்தும் திறன், மனோதிடம் , உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். அதுவும், வெளிநாட்டில் உள்ள கார் நிறுவனத்தின் விசேஷ பயிற்சி மையங்களில் செயல்முறை மற்றும் விளக்க முறை பயிற்சிகளில் வெற்றி பெற வேண்டும்.
அதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.
அதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.
அதாவது, மிக கடினமான பயிற்சி முறைகளையும், மொழிப்புலமையையும் அவர்கள் பெற்றிருப்பது அவசியம். மேலும், ரூ.2.57 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய முகேஷ் அம்பானிக்கு ஒவ்வொரு நொடியும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றன.
அந்த அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை அந்த ஓட்டுனர்களுக்கு இருத்தல் அவசியம். அம்பானிக்கு பணம் முக்கியமல்ல. நம்பகமான, திறமையான ஓட்டுனரே தேவை. எனவே, அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கு அவர் கொடுக்கும் சம்பளம் ஒரு பெரும் பொருட்டாக இருக்காது.
ஒவ்வொரு நொடியும் அச்சுறுத்தலான பணி என்பதை இங்கே வசதியாக நாம் மறந்துவிடக்கூடாது. உளவுத்துறை, அம்பானி வீட்டில் இயங்கும் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்டவர்களின் கண்காணிப்பில் எந்நேரமும் வாழ வேண்டிய சூழலையும் மனதில் வைத்தால், இந்த சம்பளம் ஒரு பொருட்டாக இருக்காது.
முகேஷ் அம்பானி பிஎம்டபிள்யூ குண்டு துளைக்காத சிறப்பு கொண்ட 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார். இது போன்ற கார்களை இயக்குவதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!