நோ-பார்க்கிங்கில் இருந்த காரை மீட்க பச்சிளம் குழந்தையை வைத்து நாடகமாடிய பெண்... புதிய திருப்பம்..!!
நோ-பார்க்கிங்கில் இருந்த காரை மீட்க பச்சிளம் குழந்தையை வைத்து நாடகமாடிய பெண்... புதிய திருப்பம்..!!
மும்பையில் பச்சிளம் குழந்தையுடன் காரில் இருந்த தாயை போக்குவரத்து போலீஸார் ஒருவர் டொயிங் வேனுடன் கட்டி இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவிக்கும் வரை இந்த சம்பவம் தீவிரமாக மாறியது.

தாயையும், குழந்தையையும் அபாயகரமான நிலையில் காரில் இழுத்து சென்ற குற்றத்திற்காக போக்குவரத்து காவலர் சாசங்க் ரானே பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

ஆனால் உண்மை இதுவல்ல என்றுக்கூறி, இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முழு வீடியோ அதாரங்களை தற்போது ’இந்தியா டூடே’ செய்தி தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கார் டோயிங் வேனுடன் இழுத்து செல்லப்படுவதற்கு முன்னதாக நடைபெற்ற சம்பவங்கள் என்று கூறி இந்தியா டூடே இந்த செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், நோ பார்க்கிங் பகுதியில் நின்றிருக்கும் ஸ்விஃப்ட் டிசையர் கார் உள்ளே பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படும் அப்பெண் போலீசாரிடம் தனியாக தீவிர வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
Recommended Video


காருக்கு வெளியில் அப்பெண்ணின் கணவர் கையில் தான் அந்த குழந்தை உள்ளது. பல முறை அப்பெண்ணை போலீஸார் காரில் இருந்து இறங்குமாறு கேட்டும் அப்பெண் மறுக்கிறார்.
Trending On Drivespark:

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த போலீசார், அப்பெண்ணை உள்ளே வைத்தபடியே ஸ்விப்ஃட் காரை ‘டோயிங்' வேனுடன் இணைக்கின்றனர்.

உடனே அந்த பெண், வெளியே கணவரின் கையில் இருந்த குழந்தையை உள்ளே வாங்கிக்கொண்டு. கார் செல்லும் வழிகளில், குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருப்பதாக கூறி அப்பெண் கூச்சலிட தொடங்குகிறார்.
சம்பவம் தொடர்பான முழு வீடியோ:
மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இரக்கமின்றி போலீஸார் நடந்துக்கொள்வதாக கூறி, அவர்களை சாடினர்.

இதற்கு பிறகு வேன் நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணும், குழந்தையும் கீழே இறக்கப்பட்டனர். பெண்ணின் கணவர் ‘நோ பார்க்கிங்' பகுதியில் காரை நிறுத்தியதற்காக அபராதம் செலுத்தியதை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வருகிறது.

இந்தியா டூடே செய்தி தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கும் இந்த புதிய வீடியோ கைக்குழந்தையுடன் இருந்த தாயை காரில் இழுத்து சென்ற சம்பவம் மீது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு வலைதளங்கில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ முழுவதுமாக பதிவிடப்பட்டு வைரலாகவும் பரவி வருகிறது.

பிரச்சனையை முழுவதுமாக அறிந்த பலர், குற்றம் அப்பெண் மீது என்று நிரூபிக்கப்பட்டால், அந்த பெண் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

படை இடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் சாசங்க் ரானே இந்த பிரச்சனை தொடர்பாக அவர் எடுக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தான் இந்த பிரச்சனைக்காக தீர்வே அடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








