இந்தியாவின் முதல் ஏசி புறநகர் ரயில் சேவையை வரவேற்க தயாராகும் மும்பை..!!
இந்தியாவின் முதல் ஏசி புறநகர் ரயில் சேவையை வரவேற்க தயாராகும் மும்பை..!!
2018, ஜனவரியில் முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்ட புறநகர் ரயில் போக்குவரத்து சேவை மும்பையில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

குளிரூட்டும்படியான வசதிகளுடன் கோச்சுகள் அனைத்தும் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரூ.50 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 12 பெட்டிகள் கொண்ட 6000 பேர் பயணிக்கும் வகையில் இந்த கோச்சுகள் தயாராகி வருகின்றன. இதில் 4926 பேர் நின்றுகொண்டும், 1028 பேர் அமர்ந்துகொண்டும் பயணம் செய்யலாம்.

ஆடம்பரத்தின் முதல் படியாக வரவிருக்கும் இந்த ரயிலின் கட்டணங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Recommended Video


தற்போது மும்பை புறநகர் ரயில் கட்டணங்களை விட ஏசி ரயிலுக்கு சதவீதம் 1.5% அதிகமாக இருக்கும் என்று தகவல் கிடைக்கின்றன.

இருந்தாலும் முழுமையான விலைப்பட்டியல் பற்றிய விவரங்களை தயாரிக்கும் பணிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவின் முதல் ஏசி புறநகர் ரயில் சேவை, மும்பையில் மேற்குப்பகுதி போக்குவரத்திற்காக அறிமுகமாகிறது.

பிறகு அந்நகரத்தின் மத்திய பகுதிகளுக்கு மேற்கு வழியில் இயங்கும் புறநகர் ஏசி ரயில்கள் இணைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

மும்பைக்கு எப்போதும் மேற்கு மற்றும் மத்திய பகுதிகள் இதயம் போன்றது. இந்த வழித்தடங்களில் மட்டும் சுமார் 65 லட்சம் முதல் 75 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








