Just In
- 37 min ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 2 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 4 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 5 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
இந்த மனசு தான் சார் கடவுள்!! 22 லட்ச ரூபாய் காரை அசால்ட்டாக விற்று சமூக பணியாற்றும் இளைஞர்!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் அதேசமயம் பலர் ஹீரோக்களாக உருவெடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸின் பரவலில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்படுவதால் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை இந்தியாவில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.
ஏனெனில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருவது கடந்த சில வாரங்களாக தொடர் கதையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக டாடா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் இறங்கியுள்ளன.
அதேநேரம் சில தனிநபர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், ‘ஆக்ஸிஜன் மேன்' என அழைக்கப்படும் மும்பை, மலாட் நகரில் வசிக்கும் ஷாஹனாவா ஷேக் என்பவரை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
மலாட் நகரில் பிரபலமான நபராக விளங்கிவரும் ஷாஹனாவாஸ் சில நாட்களுக்கு முன்பு தான் தான் ஆசை ஆசையாக வாங்கிய ரூ.22 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு எஸ்யூவி காரை விற்று அதில் கிடைத்த பணத்தில் தனது பகுதி மக்களுக்காக 160 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கினார்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை என தொடர்பு கொள்வோருக்கு உடனடியாக தன்னிடம் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சரியான நேரத்தில் டெலிவிரி செய்து வருகிறார். இதற்காக குழு ஒன்றையும், உதவி எண்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையையும் இந்த ஹீரோ அமைத்துள்ளார்,
உதவி எண்களில் தொடர்பு கொள்வோருக்கு உடனடியாக உதவும் ஷாஹனாவாஸின் குழுவினரிடம் இருந்து கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரையில் 4,000க்கும் அதிகமானோர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.
அதேநேரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கி காட்டுவதையும் அவர்கள் கடமையாக கொண்டுள்ளனர். ஷாஹனாவாஸ் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு வழங்குவதற்கு ஓர் சிறு கதை உள்ளது.
அதாவது கடந்த ஆண்டு உடல்நலக்குறைவின் காரணமாக ஷாஹனாவாஸின் நண்பரின் மனைவி இறந்தார். இவரது மரணத்திற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த சம்பவம் இவரை வெகுவாக பாதித்துள்ளது.
இதனாலேயே தேவை என்போருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குவதை ஷாஹனாவாஸ் கடமையாக ஏற்று மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் வைரஸினால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது இந்த ஹீரோவை கவலையுற செய்துள்ளது.
ஷாஹனாவாஸிற்கு ஒவ்வொரு நாளும் 500ல் இருந்து 600 தொலைப்பேசி அழைப்புகள் ஆக்ஸிஜன் சிலிண்டரை வேண்டி வருகின்றனவாம். இந்த அளவிற்கு மக்களின் தேவை அறிந்து செயல்படும் இந்த மும்பை வாசி ரியல் ஹீரோ தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!