Just In
- 54 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாகன ஓட்டிகளுக்கு உதறல்... கலெக்ஸன் தொகையை அதிகரிக்க போலீஸ் போட்டுள்ள ஸ்கெட்ச் இதுதான்... என்னனு தெரியுமா?
இ-சலான்களுக்கு அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல் துறையினரின் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இ-சலான்களுக்கு அபராதம் செலுத்தாமல் உள்ளவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் மும்பை காவல் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டன.
தற்போதைய நிலையில் ஏராளமானோர் இ-சலான்களுக்கு அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். அதனை வசூல் செய்வதற்காக மும்பை போக்குவரத்து காவல் துறை சார்பில் தற்போது இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இ-சலானுக்கு அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களை, காவல் துறையினர் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அபராதம் செலுத்தும்படி கூறுகின்றனர்.
அதன்பிறகும் அபராதம் செலுத்த தவறினால், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர அபராதம் வசூலிப்பதற்காக, வாகன ஓட்டிகளின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு, காவல் துறையினர் நேரடியாகவும் வரவுள்ளனர். ரொக்கமாகவோ அல்லது கார்டுகள் மூலமாகவோ வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்த முடியும்.
அபராத தொகைகளை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும், வாகன ஓட்டிகளிடம் நாகரிகமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 100 இ-சலான்கள் வினியோகம் செய்யப்பட்டால், 30 முதல் 50 சதவீத இ-சலான்களுக்கு மட்டுமே அபராதம் வசூலாகிறது.
இதனை அதிகரிப்பதற்காக தற்போது இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அபராத தொகைகளை செலுத்துவதற்கு பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்ற தொடங்கினாலும் இந்த திட்டத்திற்கு வெற்றி கிடைத்தாகவே அர்த்தம். மஹாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை, கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளே பெரும்பாலும் விதிகளை மீறுகின்றனர்.
சிகப்பு விளக்கு எரியும்போது சிக்னலை கடந்து செல்வது, அதிவேகமாக பயணம் செய்வது மற்றும் பார்க்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வது போன்ற விதிமுறை மீறல்களுக்காகவே அதிக அளவிலான இ-சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் காவல் துறையினரின் நடவடிக்கை கடுமையாவதால், விதிமுறை மீறல்கள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் காவல் துறை அதிகாரிகள் இ-சலான்கள் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை நிறுத்தி அபராதம் விதிப்பதற்கு காவல் துறையினர் சிரமப்பட வேண்டியுள்ளதால், அதற்கு மாற்றாக இ-சலான் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்தும் முயற்சியில் கடந்த காலங்களில் காவல் துறையினர் பலர் காயமடைந்துள்ளனர். சில சமயங்களில் காவல் துறையினர் நிறுத்துமாறு கூறியும், வாகன ஓட்டிகள் நிறுத்தாமல் சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளன. காவல் துறையினர் மீது கார்கள் மோதிய சம்பவங்கள் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க, தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களை காவல் துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Note: Images used are for representational purpose only.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!