இஎம்ஐ கட்ட முடியலன்னு நம்பர் பிளேட்டை மாற்றிய வாகன உரிமையாளர்! கடைசில சுத்து போட்டு புடிச்சிட்டாங்க!
மும்பை போலீஸ், கோலாபாவில் உள்ள தாஜ் ஹோட்டல் அருகே ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு ஒரே மாதிரியான எர்டிகா டூரிஸ்ட் கார்களை கண்டுபிடித்ததில் அதிர்ச்சியூட்டும் சுவாரஸ்யான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விசாரணையில், வாகன உரிமையாளர் கடன் சுமைகளை தவிர்க்க ஒரு சுவாரஸ்யமான முயற்சி செய்தது வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தனது வாகனத்தின் EMI கட்டணங்களைச் செலுத்த முடியாமல், கடன் தனது காரை மீண்டும் எடுத்துக்கொள்வதைத் தடுக்க வாகன உரிமையாளர் வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டார். நரிமான் பாயிண்ட் வாசியாக சாகிர் அலி, கேட்வே ஆஃப் இந்தியா பகுதியை கடந்து செல்லும் போது, தனது காரின் நம்பர் பிளேட் போலவே இருந்த மற்றொரு காரைக் கண்டபோது அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசில் புகாரிளித்த போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போலீஸ் ஆரம்ப கட்ட விசாரணையில், நவி மும்பையை சேர்ந்த பிரசாத் கடாம் என்பவர் தான் தனது வாகனத்தின் நம்பர் பளேட்டை மாற்றிய நபர் என்று தெரிய வந்தது. பின்னர் கடாம் மற்றும் அவரது கார் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர் நடந்த விசாரணையில் தான் பல உண்மைகள் வெளிவரத்துவங்கின.
அங்கு அவர் நிதி நிறுவனத்தின் மீட்பு ஏஜென்ட்களை தவிர்க்க தனது வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றியதாக ஒப்புக்கொண்டார். தனது காரின் எண்ணில் இருந்த கடைசி எண்ணை '3' லிருந்து '8' ஆக மாற்றியுள்ளார். இதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது., பல முறை தனது EMI கட்டணங்களை செலுத்த முடியாததால் ஏற்பட்ட கடன் சுமைகளை சமாளிக்க இப்படியான சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

ஒரே மாதிரியான நம்பர் பிளேட்டை சகிர் அலிக்கு குழப்பம் மற்றும் கவலை ஏற்பட்டது, அவர் செய்யாத போக்குவரத்து விதிமீறல்களுக்கான தவறான அபராதங்கள் மூலம் இது மேலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டிருந்தது. அந்த விதிமீறல்கள் கடாம் மூலம் ஏற்பட்டது என பின்னர் தெரியவந்துள்ளது.
அவர் தனது காரில் அலியின் காரின் பதிவு எண்ணான MH01EE2388 ஐ மாற்றிக்கொண்டார், இது MH01EE2383 என்பது தான் கடாமின் சரியான வாகன பதிவு எண். இந்த குழப்பத்தால் அலிக்கு போக்குவரத்து மீறல்களுக்கான அபராதங்கள் மட்டுமல்லாமல், கட்டண தவிர்க்கலுக்கான அறிவிப்புகளும் வந்தது.
அவர் குற்றமற்றவர் என அவருக்கு தெரிந்த போதிலும் என்ன செய்வது என தெரியாமல் இருந்தார். அலி போக்குவரத்து போலீசாரிடம் நீதி தேடுவதற்கான முயற்சிகள் முதலில் தீர்க்கப்படாமல் இருந்தன, இதுபோன்ற கடாமின் தந்திரமான செயல்பாடுகளால் இவர் போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைந்து கொண்டிருந்ததார்.
மும்பை போலீஸ் இதற்கிடையே தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர், கார் உரிமையாளரை குற்றவாளி என குற்றம் சாட்டி அவரை கைது செய்துள்ளனர். கடன் பொறுப்புகளை தவிர்க்க தனிநபர்கள் எந்த அளவிற்குச் செல்வார்கள் என்பதை இந்த வழக்கு குறிப்பிடுகிறது, அத்தகைய திறமையான தந்திரங்களை தீர்க்க சட்ட அமலாக்க அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்களை இது எடுத்து காட்டுகிறது.
கடன் பிரச்சனையால் ஏற்படும் அபாயகரமான சிக்கல்கள் மற்றும் சிலர் தங்கள் கடமைகளை தவிர்க்க பயன்படுத்தக்கூடிய சட்ட விரோத மாற்று முறைகள் பற்றிய எச்சரிக்கை சம்வமாக இது இருக்கிறது. தற்போது கடாம் போலீசில் மாட்டிக்கொண்டார். ஆனால் இவர் போல பலர் இன்னும் மாட்டாமல் இது போன்ற சட்ட விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்வு வாகனம் சம்பந்தப்பட்ட புதிய வகையான தந்திரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மும்பை போலீஸுக்கான குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக இது இருக்கிறது. கார் உரிமையாளர்களிடையே கவனமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும், அத்தகைய தந்திரமான ஏமாற்று வேலைகளை கண்டுபிடித்து தீர்க்க அதிகாரிகள் திறமையாக இருக்க வேண்டிய தேவையையும் இருப்பதை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.


Click it and Unblock the Notifications








