Just In
- 49 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒரே நாளில் 6,800 வாகனங்களை கொத்தாக தூக்கிய போலீஸ்... ஆனா இந்த காரணம் புதுசு... என்னனு தெரியுமா?
ஒரே நாளில் 6,800 வாகனங்களை பறிமுதல் செய்து, காவல் துறையினர் அதிரடி காட்டியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அத்துடன் தனியார் கார், டூவீலர்களை இயக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த எச்சரிக்கையை மீறிய வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால் ஊரடங்கில் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. எனவே இந்தியாவில் தற்போது வாகன போக்குவரத்து ஓரளவிற்கு சீராகியுள்ளது. பஸ், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இயங்கி வருகின்றன.
மேலும் தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதே சமயம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில், போலீசார் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றனர். இதில், மும்பையும் ஒன்று. இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிக மோசமான பாதிப்பை சந்தித்திருக்கும் நகரம் மும்பைதான்.
எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, வாகனங்களின் இயக்கத்திற்கு மும்பை போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேல் செல்ல கூடாது என்பதும் இதில் ஒன்று. அதாவது உரிய காரணம் இல்லாமல், தனது வீட்டில் இருந்து ஒருவர் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் செல்ல கூடாது.
இதில், ஷாப்பிங், உடற்பயிற்சி போன்றவை அடங்கும். ஆனால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அவசரமாக மருத்துவமனை செல்பவர்கள், 2 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணிக்கலாம். இந்த புதிய விதியை, மும்பை போலீசார் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த விதிமுறையை மீறியதாக கடந்த ஞாயிற்று கிழமை (ஜூன் 28) மட்டும், சுமார் 6,800 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், மருத்துவ ரீதியிலான காரணங்கள் எதுவும் இல்லாமலோ அல்லது அவசர காரணங்கள் எதுவும் இல்லாமலோ வாகனங்களை ஓட்டி வந்து விதிமுறைகளை மீறியுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பை நகரில் மொத்தம் 12 மண்டலங்கள் உள்ளன. அவை அனைத்தில் இருந்தும் ஞாயிற்று கிழமை ஒரே நாளில் சுமார் 6,800 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மும்பையை போலவே சென்னையிலும் தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்பவர்கள் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். அதற்கு பதிலாக நடந்து செல்லும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை மீறுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை கூட சென்னை போலீசார் சமீபத்தில் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அளவில் பார்த்தால், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அதன் உரிமையாளர்களுக்கு எப்போது திருப்பி தரப்படும்? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உரிமையாளர்கள் அபராதத்தை செலுத்திய பின்னர் அல்லது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகு வாகனங்கள் திரும்ப வழங்கப்படுகின்றன.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இன்னமும் ஒரு சில இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சாலைகளில் ஒரு சில வாகன ஓட்டிகள் அதிவேகத்திலும், தாறுமாறாகவும் செல்கின்றனர். எனவே அதிவேகமாகவும், தாறுமாறாகவும் இயக்கப்பட்ட 46 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் லக்ஸரி கார்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் மும்பை போலீசார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!