2 மணிநேரத்தில் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்... போக்குவரத்து போலீசார் கிடுக்கிப்பிடி..!!
108 போக்குவரத்து விதிமீறல்கள் செய்த பைக் ரைடருக்கு ரூ.10,800 அபராதம்; தீவிரமாகும் ’ஆப்ரேஷன் சீட்டா’..!!
போக்குவரத்து விதிகளை அனைத்து வாகன ஓட்டிகளும் முறையாக பின்பற்ற வேண்டி ஆப்ரேஷன் சீட்டா என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல மாதங்களாக கிடப்பில் கிடந்த இந்த திட்டம் ஒருவழியாக கர்நாடக மாநிலம் மைசூரு மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 'ஆப்ரேஷன் சீட்டா'-வின் கீழ் இதுவரை 4418 வழக்குகளை போலீசார் பதிந்துள்ளனர்.

இதன்மூலம் 15,000 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாமல், சாலையில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மைசூரு பகுதிகளில் எந்த நேரமானாலும் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.
Recommended Video


அவ்வாறு கடந்த சனிக்கிழமை போலீசார் கண்காணிப்பின் கீழ் பதிவான வழக்குகள் மூலம் இதுவரை ரூ.5,02,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Trending On Drivespark:

மைசூரின் அனைத்து பகுதிகளுமே ஆப்ரேஷன் சீட்டா நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் லக்ஷ்மிபுரம் என்ற பகுதியில் இது இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக மைசூரு காவல் ஆணையர் ஏ. சுப்ரேமனேஷ்வர ராவ் நகரின் அனைத்து பகுதிகளுக்கு போக்குவரத்து தேவைகளை வலியுறுத்தி இந்த திட்டத்தை எடுத்து சென்றார்.

முன்பே குறிப்பிட்டது போல 4418 வழக்குகள், ரூ. 5,02,200 அபராதம் என்பது நன்பகல் 12 மணி முதல் 2.30 மணிக்குள் வசூலிக்கப்பட்டுள்ளது.

அப்ரேஷ்ன் சீட்டா தொடங்கி நடைபெற்ற சமயத்தில் ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் பிளஸில் சென்ற ஒரு ரைடர் சுமார் 108 போக்குவரத்து விதிகள் மீறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இவரிடம் மட்டும் கர்நாடகாவின் மைசூரு போக்குவரத்து காவல்துறை ரூ.10,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக அந்த நபர் செய்து வந்த போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை வைத்து 108 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

அதாவது நன்பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை என்றில்லாமல் மைசூரு நகரில் எப்போது வேண்டுமானாலும் ஆப்ரேஷன் சீட்டா மேற்கொள்ளப்படலாம்.

இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு மக்களும் ஆதரவு வேண்டும் எனவும், எப்போதும் வேண்டாமானாலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக

எப்போதும் முறையான ஆவணங்களை வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும் என மைசூரு காவல் ஆணையர் சுப்ரமனேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications