Just In
- 3 min ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 1 hr ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 2 hrs ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 4 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
Don't Miss!
- News தமிழ்நாடு வாக்காள பெருமக்களே.. தாம்பரம், திருநெல்வேலி சிறப்பு ரயிலை மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே பாருங்க
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...
நடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள போட்டோ, நீண்ட நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களின் ஆசையை தூண்டி விட்டுள்ளது.
நம் அனைவரையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) வீடுகளுக்கு உள்ளேயே முடக்கி போட்டுள்ளது. நம்மால் முன்பு போல் சுதந்திரமாக வெளியே செல்ல முடிவதில்லை. நண்பர்கள் மற்றும் விருப்பமானவர்களுடன் கார், பைக் பயணங்களை மேற்கொள்ள முடிவதில்லை. நம் வாழ்க்கை முறையை கொரோனா வைரஸ் அப்படியே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், பின்னர் மே 3 மற்றும் மே 17 என இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இதன்படி பார்த்தால் நாளையுடன் (மே 17) ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும்.
ஆனால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதலே பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அத்துடன் பொதுமக்களும் தங்கள் வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது.
ஆனால் காவல் துறை விடுத்த எச்சரிக்கையையும் மீறி ஒரு சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுவதை பார்க்க முடிந்தது. அத்தகைய நபர்களின் வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர்களுக்கு அபராதமும் விதித்தனர். மக்கள் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர் தன் கணவருடன் பைக் ரைடு செல்லும் போட்டோவை தற்போது சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வேறு யாருமல்ல. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாதான் அவர். சமந்தாவிற்கும், புகழ்பெற்ற நடிகரான நாக சைதன்யாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
சமந்தா இந்த ஊரடங்கு காலகட்டத்தை கணவர் நாக சைதன்யா உடன் உற்சாகமாக செலவிட்டு வருகிறார். அவர்கள் இரண்டு பேரும் தங்கள் வளர்ப்பு நாயுடன் பொழுதை கழித்து வருகின்றனர். இந்த சூழலில், நேற்று (மே 15ம் தேதி), கணவர் நாக சைதன்யாவுடன் தான் பைக் ரைடு செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இந்த பைக்கில் நாக சைதன்யாவின் முகம் ஹெல்மெட்டால் கவர் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் சமந்தா, அழகாக சிரித்து கொண்டே கேமராவிற்கு போஸ் கொடுக்கிறார். சமந்தா பேக் ஒன்றை மாட்டி கொண்டு, கையில் ஹெல்மெட்டையும் வைத்திருக்கிறார். இது உண்மையிலேயே நல்ல விஷயம்.
தற்போதைய சூழலில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாத காரணத்தால்தான், இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே டூவீலரில் பயணிக்கும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் ஹெல்மெட் அணிந்து பயணித்துள்ளனர்.
அவர்களது ரசிகர்களும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவார்கள் என நம்பலாம். நாக சைதான்யாவும், சமந்தாவும் வலம் வந்திருப்பது பிஎம்டபிள்யூ-ஆர் நைன் டி (BMW R nineT) மோட்டார்சைக்கிள் ஆகும். பிஎஸ்-4 விதிகளுக்கு இணக்கமான இந்த பைக், நாக சைதன்யாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாக்டவுன் அமலில் இருக்கும் தற்போதைய சூழலில், தேவையான பொருட்களை வாங்க அவர்கள் ஷாப்பிங் சென்று வந்தனரா? அல்லது தாங்கள் முந்தைய சமயங்களில் மேற்கொண்ட டிரிப்களில் ஒரு பழைய போட்டோவை சமந்தா வெளியிட்டுள்ளாரா? என்பது பற்றி தற்போதைக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை.
ஆனால் சமந்தா இப்படி புகைப்படங்களை வெளியிடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் பல முறை தனது ரசிகர்களுக்காக அவர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, சமந்தா தனது கணவர் நாக சைதன்யா மற்றும் செல்ல பிராணியுடன் காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா தற்போது வெளியிட்டுள்ள பைக் ரைடு போட்டோவை பார்க்கும்போது, நாமும் பைக்கில் ஜாலியாக ஒரு லாங் டிரிப் சென்று வரலாமோ? என்ற ஆசை உங்களுக்கு ஏற்படலாம். நீண்ட நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கும் பைக் காதலர்களுக்கு அப்படி ஆசை ஏற்படுவது என்னவோ இயல்பான ஒன்றுதான்.
ஆனால் கொரோனா வைரஸின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், அப்படி எதுவும் செய்து வீண் பிரச்னையில் சிக்கி கொள்ளாதீர்கள். ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவது என்னவோ உண்மைதான். இதனால் சாலைகளில் முன்பை விட தற்போது அதிக அளவிலான வாகனங்களை பார்க்க முடிகிறது.
எனினும் இந்த தளர்வுகள் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே பொருந்தும். ஜாலியாக ஊர் சுற்றுபவர்களுக்கோ, பைக்கில் லாங் டிரிப் அல்லது சுற்றுலா செல்பவர்களுக்கோ பொருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும் பயணங்களுக்கு இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில், அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி வாங்குவது அவசியம். எனவே நீங்கள் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றினால், முன்பு போலவே உங்கள் மீது தற்போதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள்.