இதுக்குலாம் தனி தைரியம் வேண்டும்!! நம் பிரதமர் பறந்த போர் விமானத்தில் இவ்வளவு மேட்டரு இருக்கா!
பிரதமர் நரேந்திர மோடி (Prime minister Narendra Modi) இந்தியாவின் பாதுகாப்பு தரத்தை உலகிற்கு வெளிகாட்டும் விதமாக, இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார். பின்னர் இந்த பயண அனுபவத்தை மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகளவில் இந்திய இராணுவம் ஓர் அசைக்க முடியாத சக்தியாக மாறி வருகிறது. சில மாதங்களுக்கு முன் இராணுவத்திற்காக தேஜஸ் விமானங்களை வாங்கிய மத்திய அரசு, புதியதாக சு-30எம்கேஐ போர் விமானங்களை வாங்க உள்ளதாகவும், சுகோய் நிறுவனத்தின் உதவியுடன் இந்த போர் விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.

இந்த நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேஜாஸ் போர் விமானத்தில் நேரடியாக பயணம் செய்து பிரம்மிக்க வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் தான் தற்சமயம் இந்தியா முழுவதும் டிரெண்டாக உள்ளன. இந்த படங்களை பிரதமரும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனது இந்த விமான பயண அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், "தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிக்கரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்ப முடியாத அளவிற்கு செழுமையாக இருந்தது. நமது நாட்டின் உள்நாட்டு திறன்களில் எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும், நமது தேசிய திறனை பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது" என்றார்.

பொதுவாக, தேஜஸ் ஆனது ஒரேயொரு இருக்கையை கொண்ட போர் விமானம் ஆகும். ஆனால் இந்த பயணத்தில், பிரதமர் அமர்வதற்காக தேஜஸ் விமானத்தின் 2-சீட்டர் டிரைனர் வேரியண்ட் விமானம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தேஜஸ் போர் விமானத்தின் இந்த வேரியண்ட்டும் ஏர் ஃபோர்ஸின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகிறது.
இந்த வகை தேஜஸ் போர் விமானங்களை பயிற்சியின் போதுதான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இந்திய விமான படையில் மட்டுமின்றி, கடற்படையிலும் 2-சீட்டர் தேஜஸ் போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடை குறைவான & அளவில்-சிறிய போர் விமானமான தேஜஸ் இந்திய இராணுவ படைகளில் 4.5-ஜென்ரேஷனில் பயன்படுத்தப்படுகிறது.

இது ஓர் மல்டி-ரோல் போர் விமானம் ஆகும். அளவில்-சிறியதாகவும், எடை குறைவானதாகவும் இருப்பதால், தேஜஸ் போர் விமானங்களை எந்தவொரு தேவைக்கும் எளிதாக பயன்படுத்த முடியும். இருப்பினும், தேஜஸ் போர் விமானங்களை இந்திய இராணுவம் வான்வழி உதவிகளுக்கும், போர் சமயத்தின் போது தரைவழி தாக்குதல் செயல்பாடுகளுக்கு உதவுவதற்கும் பயன்படுத்தி வருகிறது.
சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதால், தேஜஸ் போர் விமானங்கள் விபத்து-இல்லா பறக்கும் திறனை கொண்டவைகளாக உள்ளன. இந்திய விமான படையில் தற்சமயம் 40 தேஜஸ் எம்கே-1 விமானங்கள், 83 தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை, மொத்தம் 36,468 கோடி ரூபாய் முதலீட்டில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னத்தான் பலமுறை சோதிக்கப்பட்ட, பாதுகாப்பு வசதிகள் மிக்க போர் விமானமாக இருந்தாலும், ஓர் நாட்டின் உயர் பதவியில் வகிக்கும் பிரதமர் நேரடியாக பயணிக்கிறார் என்றால் ஆச்சிரியமான விஷயம் தான். இதற்கு எல்லாம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் விமானங்களின் மீதும், உள்நாட்டு தயாரிப்புகளின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம்.


Click it and Unblock the Notifications









