Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
விமான செலவு மிச்சம்... ஒரு மிதி மிதிச்சா பெங்களூர்-மைசூர் 90 நிமிடம் தான்! ரூ.9000 கோடியில் புதிய விரைவுச்சாலை
பெங்களூர்-மைசூர் இடையேயான விரைவுச்சாலை திறப்பு விழாவிற்கு வேகமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், 10-வழி விரைவுச்சாலையான இதன் படங்களை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரை வெகுவாக கவர்ந்துவரும் இந்த படங்கள் குறித்து இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரூ.9000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச்சாலை இந்த பிப்ரவரி மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் முக்கிய இரு மாநகரங்களான பெங்களூர் மற்றும் மைசூர் இடையேயான சாலை பயண நேரமானது தற்சமயம் ஏறக்குறைய 3 மணிநேரமாக உள்ளது. புதிய விரைவுச்சாலையின் மூலம் வெறும் 90 நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்த 2 நகரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு சென்றுவிட முடியும்.
அதாவது, வழக்கத்தை காட்டிலும் பயண நேரம் பாதியாக குறையும். இந்த விரைவு நெடுச்சாலையில் மொத்தம் 10 பாதைகள் இருப்பதாக ஏற்கனவே கூறினோம் அல்லவா. ஆனால் 6 பாதைகள் மட்டும் தான் மைய நெடுஞ்சாலைக்கானது. இந்த 6 பாதைகளுக்கு இரு பக்கமும் தலா 2 பாதைகளை கொண்ட சர்வீஸ் சாலைகள் உள்ளன. திறக்கப்பட்ட பின் இந்த விரைச்சாலையில் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு காரையோ அல்லது கனரக வாகனத்தையோ தான் எடுத்து செல்ல வேண்டும். அல்லது அந்த வழியாக செல்லும் பேருந்தில் பயணிக்கலாம்.
ஏனெனில் இந்த புதிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிள்கள் உள்பட ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் அனுமதிக்கப்பட போவதில்லை. இவற்றிற்காகவே சர்வீஸ் சாலைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 117கிமீ தொலைவிற்கு நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலை பெங்களூரு, மைசூருக்கு இடையே நிடாகட்டா என்ற மற்றொரு முக்கிய நகரத்தையும் ஒருங்கிணைக்கிறது.
கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகளில் ஒரு பகுதியாக இந்த நெடுஞ்சாலையை ஸ்ரீரங்கப்பட்னா நெடுஞ்சாலை உடன் இணைக்கும் பணிகளும் கடந்த ஜனவரி 30ஆம் தேதியோடு நிறைவடைந்துள்ளன. இந்த இணைப்பிற்காக 7 கிமீ தொலைவு நீளத்திற்கு இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய விரைவுச்சாலையினை கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் நேரில் பார்வையிட்டார்.
அப்போது இந்த விரைவுச்சாலை வருகிற 2023 பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் நிதின் கட்கரி, "இந்த மைசூர்-பெங்களூர் விரைவுச்சாலையில் பயணம் செய்யும்போது நீங்கள் என்னை நினைத்து பார்ப்பீர்கள்" என தெரிவித்தார். நிதின் கட்கரியின் பதிவின் மூலம் இந்த புதிய விரைவுச்சாலை இணையத்தில் பிரபலமாகி இருப்பதற்கு அதன் படங்கள் முக்கிய காரணமாகும். ஏனெனில் இதன் படங்கள் நன்கு உயரத்தில் இருந்து உயர் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த படங்களை எடுத்தவர், 'ட்ரோன்மேன்' என இணையத்தில் பிரபலமான ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். அவர் இவ்வாறு அரசாங்க விஷயங்கள் பலவற்றிற்கு ட்ரோன்கள் மூலம் படங்களை எடுத்து கொடுத்துள்ளார். அதிலிலும் குறிப்பாக, மைசூர்-பெங்களூர் இடையேயான புதிய விரைவுச்சாலையின் இந்த படங்கள் கூடுதல் அழகாக காட்சியளிக்கின்றன. அதேநேரம் இந்த விரைவுச்சாலையில் மற்றொரு ஆபத்தான விஷயமும் மறைந்திருப்பது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் சமீபத்திய பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த ஆபத்து, இரும்பு திருட்டு ஆகும்.
ஆம் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலையில் உயர் தரத்திலான இரும்பு கம்பிகளும், பேரிகேட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை அறிந்துக்கொண்ட சில சமூக விரோதிகள் அவற்றை இரவோடு இரவாக வெட்டி திருடி எடுத்து செல்வதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி, வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதாவது, சில இடங்களில் நான்கு இரும்பு கம்பிகளில் 2 திருடப்பட்டு 2 மட்டுமே உள்ளது. அந்த 2 கம்பிகள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழலாம்.
Image Courtesy: Droneman
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு