குறைந்து வரும் பெட்ரோல் கையிருப்பு... புதிய எரிபொருள் பயன்தருமா? சிறப்புத் தகவல்கள்
தென்சீன கடல்பகுதியில் எரியும் தன்மை கொண்ட புதிய மாற்று எரிபொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
மரபு சார் எரிபொருட்கள் விரைவில் மறைந்து மின்சாரம் அல்லது வேறு ஏதோ ஒரு புதிய மாற்று எரிபொருளை உருவாக்க பல உலக நாடுகள் ஆய்த்தமாகி வருகின்றன.

இதில் மின்சார ஆற்றலுக்கே பெரியளவிலான வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பல உலகநாடுகளில் மின்சார வாகனத்தேவைக்கான ஆற்றலாக மாற்றப்படவுள்ளது.

உலகளவில் சீனா, மின்சார வாகன பயன்பாட்டில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க, ஜெர்மனி, தென் கொரியா உட்பட பல நாடுகளும் மின்சார ஆற்றலை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

இந்த பட்டியலில் சமீபத்தில் இந்தியாவும் இணைந்துள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து வாகனங்களும் மின்சார ஆற்றலை கொண்டு இயங்கவைக்க இந்திய அரசும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில் தான் தென்சீன கடல் பகுதியில் எரியும் தன்மை கொண்ட ஒரு புதிய பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பனிக்கட்டி வடிவிலான இந்த பொருளை பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக பயன்படுத்துவதற்கன ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கச்சா எண்ணெயிலிருந்து தான் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 15 லட்சம் பீப்பாய் அளவு குறைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் உலகம்முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான கையிருப்பு குறைந்து இன்னும் சுமார் 50 முதல் 100 ஆண்டுகளில் அனைத்தும் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது.

இதனால் மின்சாரம் உட்பட சில புதிய ஆற்றலை உருவாக்க உலகளவில் பல விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதன் பயனாகவே தற்போது இந்த பனிக்கட்டி வடிவிலான எரிபொருள் தென் சீன கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து இயற்கை எரிவாயுவை பிரித்தெடுத்து, புதியதாக கிடைக்கும் ஆற்றலை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இனி உலகின் வாகனத்திற்கான ஆற்றலாக 2030ம் ஆண்டிற்குள் மின்சாரமே இருக்கும்.
இந்த நிலையில் அதே ஆண்டிற்குள் இந்த புதிய எரிபொருளும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications