Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்???
வீட்டு வாசலில் வாகனங்களை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம் செலுத்தும்விதமாக, புதிய பார்க்கிங் கட்டண திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளது.
வாகனம் வைத்திருப்பவரா நீங்கள்? வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால் உங்கள் வாகனத்தை உங்க வீட்டு வாசலிலேயே பார்க்கிங் செய்கிறீர்களா? அப்போ இனி நீங்க அரசுக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். ஆம் இந்த புதிய பார்க்கிங் கட்டண திட்டத்தின் மூலம், உங்களுடைய இரண்டு, மூன்று அல்லது நான்கு என எத்தனை சக்கர வாகனங்களாக இருந்தாலும் கட்டாயம் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதனால், இனிமேல் நகரத்தின் எந்த சாலையிலும் உங்கள் வாகனத்தை இலவசமாக பார்க்கிங் செய்ய முடியாது.
இந்த புதிய பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஒரு தனியார் அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இத்திட்டத்தை அமல்படுத்த அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், இன்னும் சில மாதங்களில் இத்திட்டம் மாநில வாரியாக அமலுக்குக்கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருகி வரும் மக்கள் தொகை, அதனால் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை நாட்டிற்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, பூதகரமாக கிளம்பியிருக்கிறது சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்.
மேலும், அதிகரித்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து உள்ளிட்ட சில பல்வேறு பிரச்னைகள் உருவெடுத்து வருகின்றன. மேலும், இது சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து வருகின்றது. இவற்றில் இருந்து தீர்வு காண்பது என்பது அவர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
ஏற்கனவே, சாலை போக்குவரத்திற்காக பல்வேறு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும் இதனை சற்றும் கடைபிடிக்காத நாட்டின் குடிமகன்கள், அதனால் ஏற்படும் விபரீதங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் முறையற்ற வாகன பார்க்கிங் முறையை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய பார்க்கிங் கட்டணம் திட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இந்த திட்டம் நடைமுறைக்கு வருமானால், சாலையில் மற்ற வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்படும்.
மேலும், கண்ட இடங்களில் காரை பார்க்கிங் செய்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதைத்தொடர்ந்து, சாலையில் வாகனங்களை நிறுத்தும் முறையில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். அதுமட்டுமின்றி, இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு கணிசமான அளவு வருவாய் ஈட்டமுடியும்.
இதுகுறித்து யுடிடி-யின் கூடுதல் தலைமை செயலாளர் மஹேந்திரா ஜெயின் கூறியதாவது, "இந்த புதிய பார்க்கிங் கட்டண திட்டமானது சாலையில் முறையற்ற நிலையில், மற்ற வாகனங்களுக்கு இடையூறாக பார்க் செய்யப்படுவதைத் தவிர்க்கும் விதமாக கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை நாட்டின் வளர்ச்சிப் பாதைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, நகரப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளை மேம்படுத்தவும், பாதசாரிகளுக்கான வசதியை ஏற்படுத்தி தரவும் பயன்படுத்தப்படும். இதுதவிர, பொதுமக்கள் அதிகம் புழங்கக்கூடிய இடங்களில் பலவாகனங்களைப் பார்க்கிங் செய்யும் அளவிற்கு மல்டி பார்க்கிங் இடவசதி ஏற்படுத்தப்படும்" என்றார்.