Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பார்க்கிங் விதிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்க திட்டம்... எந்த ஊரில் தெரியுமா?
பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சிலர் தங்கள் வாகனங்களை, தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்து கொள்கின்றனர். வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது என 'நோ பார்க்கிங்' பலகை வைத்திருக்கும் இடங்களில் கூட வாகனங்களை நிறுத்தி கொள்வது அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இத்தகைய நபர்களை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை பார்க்கிங் செய்து கொண்டுள்ளனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி முறைகேடாக வாகனங்களை பார்க்கிங் செய்துள்ளவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு, சன்மானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேடாக வாகனத்தை பார்க்கிங் செய்தவரிடம் இருந்து வசூலிக்கும் அபராத தொகையின் ஒரு பகுதி சன்மானமாக வழங்கப்படும்.

சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் தவறாக பார்க்கிங் செய்யப்படுவதை தடுப்பதற்காகவும், அந்த தவறை செய்பவர்கள் குறித்து தகவல் அளிக்க பொதுமக்கள் பலர் முன்வருவதை ஊக்குவிப்பதற்காகவும் நியூயார்க் நகரில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்கள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்த திட்டத்தின்படி, பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்கும் நபர்களுக்கு, விதிமுறையை மீறிய நபர் செலுத்தும் மொத்த அபராத தொகையில் 25 சதவீத தொகை சன்மானமாக வழங்கப்படும். நியூயார்க் நகரில், பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை தற்போது 115 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதனை 175 அமெரிக்க டாலர்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 25 சதவீத தொகையை புகார் அளிக்கும் நபர் சன்மானமாக பெறுவார். 175 அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரம் ரூபாய் ஆகும். எனவே புகார் அளிக்கும் நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் 3,250 ரூபாய் சன்மானமாக கிடைக்கும்.

கண்ட கண்ட இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில், போக்குவரத்து நெரிசல் மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. ஏற்கனவே பெரு நகரங்களின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை பூதாகரமாகி வருகிறது. போதாக்குறைக்கு விதிமுறைகளுக்கு எதிராக வாகனங்கள் சாலையை அடைத்து கொள்வதால், போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகி விடுகிறது.

இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது, சில சமயங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கும் தாமதம் ஏற்படுகிறது. பார்க்கிங் செய்யக்கூடாது என வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், அது சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். உதாரணத்திற்கு பரபரப்பாக இருக்கும் சாலையோரத்தில் காரை நிறுத்தினால், மற்ற வாகனங்களால் அந்த காரில் கீறல் விழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Note: Images used are for representational purpose only.