போதையில் கார் ஓட்டிய டிரைவர்; அப்பளமாக நொறுங்கிய டவேரா; 9 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்
குடிபோதையில் டிரைவர் கார் ஓட்டியதால் சென்டர் மீடியனில் மோதிய கார் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த டவேரா கார் மீது மோதியதில் அப்பளமாக நொறுங்கியது டவேரா கார். இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலி
குடிபோதையில் டிரைவர் கார் ஓட்டியதால் சென்டர் மீடியனில் மோதிய கார் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த டவேரா கார் மீது மோதியதில் அப்பளமாக நொறுங்கியது டவேரா கார். இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று டவேரா காரில் திரும்பி கொண்டிருந்தார். காரில் மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர்.

கார் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த திருச்சியில் இருந்து பொன்னாடம் நோக்கி சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தூக்கி வீசப்பட்டது. எதிர்பாராத விதமாக தூக்கி வீசப்பட்ட கார் மோகன் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதியது.

இதில் டவேரா கார் அப்பளமாக நொறுங்கியது. அந்த காரில் இருந்த 2 குழந்தைகள், 3 பெண்கள், உட்பட 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற காரை சக்தி சரவணன் என்பவர் ஓட்டியுள்ளார். அவர் பயணத்தின் போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கார் அவரின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்று சென்டர் மீடியனில் மோதியுள்ளது.

சம்பவம் நடந்த இடம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிக வேகத்தில் தான் செல்லும் அவ்வாறு செல்லும் போது வாகனத்தை ஓட்டும் டிரைவர்கள் முழு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம். டிரைவர்கள் கட்டுப்பாட்டை கார் இழந்தால் பெரும் விபத்தை சந்திக்க நேரிடும்.

இந்நிலையில் டிரைவர் சக்தி சரவணன் காரை மது போதை ஓட்டியது. மிகப்பெரிய தவறு அவரது தவறால் அவருடன் பயணித்தவர்கள் மட்டுமல்லாது எதிரே வந்தா காரில் வந்தவர்களும் குடும்பத்துடன் பலியாகியுள்ளனர்.

இந்த கோர சம்பவத்திற்கு முக்கிய காரணம் மது போதை தான். கார் ஓட்டுபவர்கள் நிச்சயமாக மது போதையை தவிர்க்க வேண்டியது கட்டாயம். இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு என்பது வரவில்லை. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அரசு மக்கள் மத்தியில் விரைவில் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்.

சட்டப்படி மது போதையில் வாகனம் ஒட்டுவது என்றால் நம் உடலில் 30 யூனிட் வரை ஆல்கஹால் இருப்பது தவறு இல்லை அதற்கும் அதிகமாக இருப்பது தான் தவறு. அதாவது குடித்து விட்டு சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்தவுடன் வாகனம் ஓட்டுவதும், மிகக்குறைவான அளவில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது அனுமதிக்கப்படுகிறது.
scource: The Hindu


Click it and Unblock the Notifications








