Just In
- 41 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பெட்ரோல் பங்க் மீது அதிரடி நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் இதுதான்.. ஆச்சரியப்படுத்தும் அரசு அதிகாரிகள்
பெட்ரோல் பங்க் ஒன்றின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே இவை இரண்டையும் குறைக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது.
ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கடைபிடிக்க தவறுகின்றனர். எனவே அவர்கள் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒரு விதி இதற்கு ஒரு உதாரணம்.
இவ்விரு நகரங்களிலும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இருவரில் ஒருவர் ஹெல்மெட் அணியாவிட்டால் கூட அந்த டூவீலருக்கு எரிபொருள் நிரப்ப கூடாது.
இதனை அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மிக கடுமையான பின்பற்ற வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் இந்த விதிமுறையை பின்பற்ற தவறிய பெட்ரோல் பங்க் ஒன்று தற்போது அதிரடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனில் ஆட்டோ சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பங்க்கில், "No Helmet No Fuel" விதிமுறை பின்பற்றப்படவில்லை என எங்களுக்கு புகார்கள் வந்தன.
இதன் பேரில் அங்கு திடீரென ரகசியமாக சென்று ஆய்வு நடத்தினோம். அப்போது எங்களுக்கு வந்த புகார் உண்மை என தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கும் அங்கு எரிபொருள் நிரப்பியுள்ளனர். அத்துடன் பெட்ரோல் பங்க் முறையாக பராமரிக்கப்படவில்லை. அங்கு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. எனவே அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தோம்'' என்றனர்.
நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரண்டு நகரங்களிலும் இந்த விதிமுறை மிக தீவிரமாக பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்துவதில் ஒரு சில பிரச்னைகள் அவ்வப்போது எழவே செய்கின்றன. இதற்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் எரிபொருள் நிரப்பும்படி பங்க் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
எனவே பெட்ரோல் பங்க்குகளை போலீசார் மப்டியில் கண்காணிக்கும் பணியை தொடங்கினர். அத்துடன் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்க்கிற்கு வந்து, எரிபொருள் நிரப்பும்படி, பங்க் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் அதிரடியாக கைதும் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
கிரேட்டர் நொய்டா நகரில், நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை மொத்தம் 481 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில், 220 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர 393 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவேதான் அங்கு சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் விஷயங்களை மாவட்ட நிர்வாகம் மிக தீவிரமாக எடுத்து வருகிறது.
இதற்கு முன்பாக "No Helmet No Fuel" விதிமுறை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் பல முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் நாளடைவில் அவற்றை வாகன ஓட்டிகளும் மறந்து விடுவார்கள். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் மறந்து விடுவார்கள். அதிகாரிகளும்தான். ஆனால் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா நகரங்களில், அதிகாரிகள் இந்த விதிமுறையை மிகவும் உறுதியாக பின்பற்றி வருவது பாராட்டுக்குரியது.
Note: Images used are for representational purpose only.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!