சர்வாதிகாரி கிங் ஜாங் உன்னின் காரில் கூட டாய்லெட் வசதி....அடேங்கப்பா....!
வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் காரணமாக அவருக்கு அதிக பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுள்ளது. அது எவ்வளவு அளவு என்றால் அவரது காரில் அவருக்கு என தனியாக டாய்லெட் அமைக்கும் அளவு
வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் காரணமாக அவருக்கு அதிக பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுள்ளது. அது எவ்வளவு அளவு என்றால் அவரது காரில் அவருக்கு என தனியாக டாய்லெட் அமைத்து அவரது கழிவுகளையும் பாதுகாக்கும் அளவிற்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

உலகின் மிக சர்வாதிகாரம் மிக்க தலைவராக கிம் ஜாங் உன் பார்க்கப்படுகிறார். அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு உலகையே மிரட்டி வரும் இவர் பெரும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவரது சர்வாதிகார தனத்தால் உலகின் பல்வேறு நாடுகள் இவரை எதிர்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இவரை கடுமையாக எதிர்த்தாலும். அவரிடம் உள்ள ஆயுதங்களை கண்டு அந்நாட்டு மீது போர் தொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

உலக நாடுகளை எல்லாம் தன் கைக்குள் வைத்துக்கொண்ட அமெரிக்கா வட கொரியாவை தனது நண்பனாக ஆக்க முடியாமல் திண்டாடி வருகிறது.

கிம் ஜாங் உன் அவரது தந்தை கிம் ஜானின் மறைவிற்கு பிறகே பதவியேற்றுள்ளார். கிம் ஜாங்கும் இவரை போலவே பெரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் மெர்சிடியஸ் பென்ஸ் கார்களையே அதிகம் விரும்புவார் அது போல் கிம் ஜாங் உன்னும் பென்ஸ் காரையே வாங்கி வருகிறார்.
Picture credit: dailystar

வடகொரியா முதன் முதலில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகனையை வடிவமைத்தவருக்கும் பென்ஸ் காரையே பரிசாக வழங்கியுள்ளார். கிம் ஜாங் உன் மீது உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவரது உயிருக்கு அதிக அளவில் ஆபத்து உள்ளது.

இதனால் அவரது பாதுகாப்பு படை என்பது மிக பலம் வாய்ந்ததாக இருக்கும். அவரிடம் சொந்தமாக விமானங்கள் இருக்கும் போதும் அவர் விமானங்களை பயணம் செய்வதை தவிர்ப்பார். விமானங்களில் அவரது உயிருக்கு அதிக ஆபத்து இருக்கும் என கருதி இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.



வடகொரியா நாட்டில் நடக்கும் எந்த தகவல்களும் வெளியுலகிற்கு தெரியவராது அவ்வப்போது மட்டும் சில தகவல்கள் வெளியே கசியும். அந்த சின்ன தகவல் கூட நம்மை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அப்படியாக வெளியாகியிருக்கு ஒரு ரகசியம் தான் அவர் காரில் உள்ள டாய்லெட் குறித்த ரகசியம். கிம் ஜாங் உன்னிற்கு உலகில் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு இருப்பதால் அவரது உடல்நிலை குறித்து பரிசோதனைகள் நடந்து கொண்டே இருக்கும். பலர் இவரை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் கொல்ல முற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை.
Picture credit: msn

அவருக்கு வழங்கப்படும் உணவுகளில் இருந்து அவரது கழிவுகள் வரை மிக ரகசியமாக பாதுகாக்கப்படும். ஆம் நீங்கள் படித்தது உண்மைதான். அவரது கழிவுகள் கூட மிக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

அவரது கழிவுகளில் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இருப்பதால் அதை மிகவும் அதிக அளவில் பாதுகாத்து வருகின்றனர். அவரது வீடு மட்டுமல்லாமல் அவர் வெளியில் செல்லும் போதும் அவர் பயன்படுத்தக்கூடிய வகையில் அவரது பென்ஸ் காரிலேயே டாய்லெட் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
Picture credit: KCNA

அங்கு அவரது கழிவுகள் சேரிகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபடுகிறது. ஆனால் அவரது எந்த காரில் அந்த வசதியுள்ளது. என யாருக்கும் தெரியாத வகையில் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது. அவர் இது வரை பொது கழிப்பறையை பயன்படுத்தியதே இல்லையாம்.

இத்தகவல் அந்நாட்டு பத்திரிக்கையில் வந்த சிறிய தகவல் மூலம் வெளியலகிற்கு தெரியவந்துள்ளது. கிம் ஜாங் உன் எந்த காரணத்திற்காகவும் காரை தேவையில்லாமல் நிறுத்தமாட்டார். அது அவரின் பாதுகாப்பும் கூட என்ற தகவல்கள் மட்டுமே அதில் வெளியாகியிருந்தது.

இதன் பின் நடந்த பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு அவரது காரிலேயே டாய்லட் வசதிகள் இருப்பதும் அவரது கழிவுகள் கூடி மிக பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

இதே போல் அவர் சீனாவிற்கு பயணம் செய்த ரயிலிலும் இவ்வாறான பல வசதிகள் இருந்துள்ளது. முக்கியமாக அந்த ரயில் முழுவதும் குண்டு துளைக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அந்த ரயிலில் பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருந்தன.

இப்படி எல்லா பாதுகாப்புகளையும் மீறி அவருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால் அவர் உடனடியாக தப்புவதற்கு ரயிலில் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் இருந்துள்ளது. இந்த மாதிரியான வசதி உலகில் யாருமே செய்து கொண்டது இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.

அது மட்டுமல்ல வடகொரியாவில் போக்குவரத்து விதியே வித்தியாசமானது. அங்குள்ள சாதாரண மக்கள் கார் வாங்கிவிட முடியாது. ஒருவர் கார் வாங்க வேண்டும் என்றால் அவருக்கு அந்நாட்டு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

பெரும் பணக்காரர் ஒருவர் கார் வாங்க வேண்டும் என்றால் கூட அரசு அனுமதியுடன் தான் கார் வாங்க வேண்டும். மற்ற எல்லோருக்கும் பொது போக்குவரத்து தான். அதுவும் சாலையில் ஒரு குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே பயணிக்க வேண்டும்.

மற்ற பகுதிகள் எல்லாம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான். சாதாரண மக்களுக்கும் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்களுக்கும் தனித்தனி வேக கட்டுப்பாடு விதிகள் உள்ளது.
Picture credit: the Sun

ஹிட்லரின் சர்வாதிகாரம் குறித்து கேள்வி பட்டிருக்கோம் ஆனால் விட கொடுரமான சர்வாதிகாரத்தை பார்க் வேண்டும் என்றால் நீங்கள் வடகொரியமாவிற்கு செல்ல வேண்டும். ஆனால் உங்களுக்கு விசா அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுமா என்ன?
Picture credit: msn


Click it and Unblock the Notifications