Just In
- 43 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 2 hrs ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 2 hrs ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
Don't Miss!
- Movies Pandian stores 2 serial: பாண்டியனை அடித்த குமரன்.. அப்பாவுக்காக மல்லுக்கு நின்ற கதிர்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை: நார்வேயில் அமைகிறது!
கடலுக்கடியில் உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை நார்வே நாட்டில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகள் நிறைவடைந்துவிட்டதால், இந்த திட்டம் விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உலகின் புதிய செயற்கை அதிசயமாக அமையப்போகும் இந்த புதிய மிதக்கும் சுரங்கப்பாதை குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.
மெகா திட்டம்
நார்வே நாட்டின் இ39 நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்டியன்சான்ட் மற்றும் டிரோன்டீம் என்ற இடங்களுக்கு இடையில் இரு நிலத்திட்டுகளுக்கு இடையே குறுகிய கடல் பகுதியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
பயண நேரம்
இந்த மிதக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், கிறிஸ்டியன்சான்ட் மற்றும் டிரோன்டீம் இடையிலான 21 மணி நேரமாக இருக்கும் பயண நேரம், பாதியாக குறையுமாம்.
சவால்
தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் நிலத்திட்டுக்களுக்கு இடையிலான நீர்வழித்தடம் அதிக ஆழமிக்கதாக உள்ளது. அதில், பாலம் அமைப்பது மிக சவாலான காரியம் என்பதுடன், அங்கு மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் மூலமாக சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும்.
மிதக்கும் பாலம்
ஆனால், தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் மிதக்கும் பாலம் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் இல்லாமல் செய்ய முடியும். 4,000 அடி நீளமுடைய ராட்சத கான்கிரீட் குழாய்களை நீருக்கடியில் அமைத்து, அதனை பலூன் போன்ற மிதவைகளில் இணைத்து தொங்கவிடப்பட உள்ளது.
ஸ்திரத்தன்மை...
கடல் அலைகளின் ஆவேசம், நீரோட்டம் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற அனைத்து நிலைகளிலும் இந்த சுரங்கப்பாதை பாதிக்கப்படாத வகையில், சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.
இருவழித்தடம்
இரண்டு ராட்சத கான்கிரீட் குழாய்களுடன் இந்த சுரங்கப்பாதை நீளும், ஒவ்வொரு சுரங்கப்பாதை குழாயிலும் இரண்டு வழித்தடங்கள் இருக்கும். ஒன்று போக்குவரத்திற்கும், ஒன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்படும்.
கப்பல் போக்குவரத்து
இந்த சுரங்கப்பாதை நீருக்கடியில் 65 அடி முதல் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட உள்ளது. இதனால், இந்த பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் எந்தவொரு சிக்கலும் இருக்காது.
முதல் கட்டம்
முதல் கட்டமாக ஒப்பேடல் மற்றும் லாவிக் என்ற இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது இந்த இரு கிராமங்களுக்கு இடையில் 20 நிமிடத்தில் படகு மூலமாக கடக்கலாம். ஆனால், நேரடி சாலை இணைப்பு இல்லை. இதைத்தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதை அடுத்தடுத்த நிலத்திட்டுகளும் விரிவுப்படுத்தப்படும்.
திட்ட மதிப்பீடு
இந்த மிதக்கும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு 19 பில்லியன் டாலர் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அது 25 மில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
திட்ட காலம்
இந்த பாலத்தை அமைப்பதற்காக கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அது முடிந்தவுடன் 7 முதல் 9 ஆண்டுகளில் மிதக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்படுமாம். மேலும், 2035ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை: சுவிட்சர்லாந்தில் திறக்கப்படுகிறது!