காருக்கு பூஜை போட பாதுகாப்பு படையுடன் கோயிலுக்கு வந்தது அவரா! பெரிய ஆளா இருந்தாலும் நம்ம பண்பாட்டை மறக்கல!
இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை (Luxury Cars) வாங்குவது என்பது புதிய விஷயம் ஒன்றும் அல்ல. அதுவும் தற்போது தீபாவளி (Diwali) பண்டிகை காலம் என்பதால், திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவித்து கொண்டுள்ளனர். இந்தியர்களை பொறுத்தவரையில், புதிய கார் அல்லது பைக் என எந்தவொரு வாகனத்தை வாங்கினாலும், ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்த உடனேயே நேராக கோயிலுக்குதான் செல்வார்கள். அங்கு பூஜை செய்தால், வாகனம் சாலை விபத்துக்களில் சிக்காது என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை.
ஆனால் திரையுலக பிரபலங்கள் புதிய வாகனங்களை வாங்கினால், கோயில்களுக்கு எல்லாம் பெரிதாக வர மாட்டார்கள். அவர்கள் கோயில்களுக்கு வந்தால், ரசிகர்கள் கூட்டம் கூடி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது பக்தர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். எனவே திரையுலக நட்சத்திரங்கள் புதிய வாகனங்களுக்கான பூஜைகளை வீடுகளிலேயே செய்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

அப்படி இருக்கும்போது மிகவும் பிரபலமான நடிகை ஒருவர், தான் புதிதாக வாங்கியுள்ள காருக்கு, விநாயகர் கோயிலில் பூஜை செய்துள்ளார். யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான நுஷரத் பருச்சா (Nushrratt Bharuccha) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வாலிப ராஜா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் கூட நுஷரத் பருச்சா நடித்துள்ளார். எனவே தமிழ் ரசிகர்களுக்கும் இவர் ஓரளவிற்கு பரிட்சயமானவர்தான்.

இவர் சமீபத்தில் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். அது மிகவும் பிரபலமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) ஆகும். இது குறித்த செய்தியை கூட டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த சூழலில் அந்த காருக்கு மும்பையில் (Mumbai) உள்ள சித்தி விநாயகர் கோயிலில் (Siddhivinayak Temple) நுஷரத் பருச்சா தற்போது பூஜை செய்துள்ளார்.
இதற்காக கோயிலுக்கு வந்தபோது, அங்கிருந்த வயதானவர்களுக்கு அவர் பணமும் வழங்கியதாக கூறப்படுகிறது. ஒரு மூதாட்டிக்கு காரில் இருந்தபடியே அவர் பணம் வழங்கும் காட்சியை சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இதற்காக நுஷரத் பருச்சாவிற்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நுஷரத் பருச்சா வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் தற்போதைய தலைமுறை மாடல் ஆகும். 394 பிஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 345 பிஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் என இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.75 கோடி ரூபாய் வரும். அதற்கு ஏற்ப அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு, 13.7 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என ஏராளமான அதிநவீன வசதிகள் எல்லாம் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசு வசதிகள் மற்றும் செயல்திறன் மிக்க இன்ஜின் ஆகிய 2 அம்சங்கள் ஒருங்கிணைந்த கலவை என ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை குறிப்பிட முடியும். நுஷ்ரத் பருச்சாவின் கார் கலெக்ஸன் (Car Collection) ஏற்கனவே பெரியதாகதான் உள்ளது.
பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX) மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) உள்ளிட்ட கார்களை எல்லாம் அவர் ஏற்கனவே வைத்துள்ளார். இந்த வரிசையில்தான் அவரது கார் கலெக்ஸனில் தற்போது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் இணைந்துள்ளது. கார் டிரைவிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், வரும் ஆண்டுகளில் நுஷ்ரத் பருச்சாவின் கார் கலெக்ஸன் இன்னும் பெரியதாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








