Just In
- 12 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 23 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அதிகாரிகளின் அதிரடியால் அலறும் வாகன ஓட்டிகள்... ஒரே நாளில் வசூலான அபராத தொகை எவ்வளவு தெரியுமா?
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், போலீசார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் அதிரடி காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
ஆனால் பல்வேறு மாநில அரசுகளே புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்தன. ஒரு சில மாநில அரசுகள் அபராத தொகையை குறைத்தன. இன்னும் சில மாநிலங்களோ புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறுத்தி வைத்தன. இதில், ஒடிசாவும் ஒன்று. ஒடிசா மாநில அரசு தொடர்ச்சியாக இரண்டு கட்டங்களாக 6 மாதங்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து தளர்வு வழங்கியது.
இந்த சூழலில், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஒடிசா மாநிலத்திலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து, 1.06 கோடி ரூபாயை ஒடிசா மாநில அரசு அபராதமாக வசூலித்துள்ளது.
ஒடிசா மாநில ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போலீசாரால் இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் ட்ரிபிள் ரைடு சென்றதற்காக 126 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டியதற்காக 49 பேரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
தவறான பாதையில் பயணம் செய்ததற்காக 10 பேரும், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதற்காக 1,831 பேரும், சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக 349 பேரும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 24 பேரும், ஓவர் ஸ்பீடு குற்றத்திற்காக 277 பேரும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக 1.06 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், ஆர்டிஓ அதிகாரிகள் 1,785 பேரிடம் இருந்து 88 லட்ச ரூபாயை வசூலித்துள்ளனர். அதே சமயத்தில் காவல் துறை தரப்பில், 2,112 பேருக்கு 18 லட்ச ரூபாய் மதிப்பில் சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அபராத தொகைகளை குறைக்க வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ சுரேஷ் ரௌத்ரி கூறுகையில், ''அபராத தொகைகளை அரசு 15 நாட்களுக்குள் குறைக்காவிட்டால், மிகப்பெரிய போராட்டத்திற்கு நாங்கள் அழைப்பு விடுப்போம்'' என்றார். சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே சமயத்தில் உரிய இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோன்று ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழி விடாதவர்களுக்கு போலீசார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகளால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும். பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகையும் 10 ஆயிரம் ரூபாய்தான். அதே சமயம் பதிவு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
Note: Images used are for representational purpose only.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!