Just In
- 4 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 4 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 7 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூப்பர் எம்எல்ஏ... ஒட்டுமொத்த இந்தியாவே இன்னைக்கு இவரதான் பாராட்டிக்கிட்டு இருக்கு... ஏன் தெரியுமா?
ஒட்டுமொத்த இந்தியாவே இன்று எம்எல்ஏ ஒருவரை பாராட்டி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்தியாவில் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளை பொறுத்தவரை பலர் ஹெல்மெட் அணிவது கிடையாது. அத்துடன் செல்போனில் பேசி கொண்டே டூ வீலர்களை ஓட்டுகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களில் பலரும் ஹெல்மெட் அணிவது இல்லை.
கார் உள்ளிட்ட மற்ற வாகன ஓட்டிகளை பொறுத்தவரை அவர்களிடமும் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டும் பழக்கம் காணப்படுகிறது. இதுதவிர குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்து வகையான வாகன ஓட்டிகளிடமும் பொதுவாகவே காணப்படுகிறது.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இவைதான் காரணங்கள். இதுதவிர சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையும் கிடைப்பது இல்லை. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்வதற்கு பலருக்கும் மனம் வருவதில்லை.
சட்ட ரீதியில் ஏதேனும் சிக்கலை சந்திக்க வேண்டியது வருமோ? என்ற பயமே இதற்கு காரணம். ஆனால் சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு காவல் துறை தரப்பில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையிலோ எவ்விதமான தொந்தரவும் ஏற்படாது என உச்ச நீதிமன்றமும், அரசும் தெளிவுபடுத்தி விட்டன.
இருந்தபோதும் இது தொடர்பான விழிப்புணர்வு இன்னும் அனைவரையும் முழுமையாக சென்றடையவில்லை. இந்த சூழலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சாலை விபத்தில் சிக்கிய மூன்று பேரின் உயிரை காப்பாற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார். இதற்காக அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஒடிசா மாநிலம் சித்ரகொண்டா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பூர்ண சந்திர பாகா. இவர் சமீபத்தில் கான்வாய் வாகனங்களுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பயணித்த மூன்று பேர் விபத்தில் சிக்கி, சாலையோரமாக விழுந்து கிடந்ததை அவர் பார்த்தார். இதனால் உடனடியாக கான்வாயை நிறுத்தும்படி அவர் உத்தரவிட்டார்.
இதன்பின் தன் காரில் இருந்து இறங்கி சென்று, விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவினார். அத்துடன் விபத்தால் காயமடைந்த மூவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தை கொடுத்தும் அவர் உதவினார். மேலும் அவர்களின் உடல் நிலை குறித்த அப்டேட்களை எம்எல்ஏ பூர்ண சந்திர பாகா தொடர்ச்சியாக கேட்டறிந்தார்.
எம்எல்ஏ பூர்ண சந்திர பாகாவால் மீட்கப்பட்ட மூவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவின் மல்கான்கிரி அருகே உள்ள நாயக்குடா எனும் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று அந்த பகுதியில் ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று பேர் பயணம் செய்துள்ளனர்.
அப்போதுதான் அவர்கள் விபத்தில் சிக்கினர். ஆனால் இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது தெரியவில்லை. எனினும் அவர்கள் மூவரும் சாலையோரமாக விழுந்து கிடந்தனர். அந்த சமயத்தில் எம்எல்ஏ பூர்ண சந்திர பாகா அவ்வழியாக வந்தபோதுதான் அவர்களை மீட்டார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களை அவர் மீட்டபோது எடுத்த வீடியோவை வைத்து பார்க்கையில், யாரும் படுகாயம் அடையவில்லை என தெரிகிறது.
ஆனால் பைக்கில் பயணித்த மூவருமே ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. அத்துடன் இது விதிமுறை மீறலும் கூட. அத்துடன் அவர்கள் மூவரும் ஒரே பைக்கில் வந்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்தின்படி இதுவும் கூட போக்குவரத்து விதிமுறை மீறல்தான். இருப்பினும் அவர்களுக்கு தக்க சமயத்தில் எம்எல்ஏ பூர்ண சந்திர பாகா உதவியுள்ளார்.
விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்கும் முதலுதவி சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் வழங்கப்படும் முதற்கட்ட சிகிச்சை ஆகியவை மிகவும் முக்கியமானது. சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், அவர்களுக்கு உதவ வேண்டும் என அனைவரும் உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.
முன்பு இருந்ததை காட்டிலும், தற்போது விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது எளிமையானதுதான். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நபர்கள் எவ்வித தொந்தரவுகளுக்கும் ஆளாக மாட்டார்கள் என்பதை அரசு உறுதி செய்துள்ளது. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை ஊக்குவிக்கும் வகையில் இது இருக்கிறது.
அத்துடன் 108 ஆம்புலன்ஸ் சேவையும் அனைத்து பகுதிகளிலும் எந்நேரமும் ஆக்டிவ் ஆக இருக்கிறது. எனவே சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை கண்டால் உடனடியாக நீங்கள் 108 ஆம்புலன்ஸை அழைக்கலாம். தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும், சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது ஒவ்வொருவரின் கடமை என்பதை மறக்க வேண்டாம்.
சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு பரிசு தொகையையும் ஒரு சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!