Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!
ஆங்கிலியன் ஒமேகா க்ரூப்பின் ஒரு அங்கமாக இருக்கும் ஒமேகா சீக்கி மொபைலிட்டி நிறுவனம் ஹரியானா அரசாங்கத்துடன் இணைந்து ஃபரிதாபாத்தில் புதியதாக கொரோனா நோயாளிக்களுக்கான இலவச மருத்துவமனையை திறந்துள்ளது.
இதற்காக ஒமேகா சீக்கி மொபைலிட்டி நிறுவனம் ஆக்ஸிஜன் நெறிவூட்டிகளை தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த ஆக்ஸிஜன் மருத்துவமனையில் 30 நோயாளிகள் சிகிச்சை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃபரிதாபாத்தில் புதியதாக ஆக்ஸிஜன் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவ உள்ளதாக ஒமேகா சீக்கி மொபைலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இலவச கோவிட்-19 மருத்துவமனை மருத்துவர்.ரந்தீப் சிங் புனியா என்பவரால் நிர்வகிக்கப்பட உள்ளது.
ஃபரிதாபாத் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொரோனா இரண்டாவது அலையினால் ஆக்ஸிஜன் படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளதால் இந்த மருத்துவமனை அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சில நோயாளிகளின் நிலைமை மிகவும் மோசமடைந்தால் உடனடியாக அவர்களை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற எங்களிடம் ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது என்றார். ஒமேகா சீக்கி மொபைலிட்டியின் தலைவர் உதய் நரங் கருத்து தெரிவிக்கையில், இந்த தொற்று காலத்தில் மருத்துவமனைகளுக்கு மிக பெரிய தேவை எழுந்துள்ளதால், ஃபரிதாபாத் நகரத்தை சேர்ந்த மக்கள் உதவிக்காக எங்களை அணுகினர்.
அதனை தொடர்ந்து மருத்துவரின் வழிக்காட்டுதலின் கீழ் தாமதமின்றி அதை தீர்க்க நாங்கள் பணியாற்ற தொடங்கியுள்ளோம். தற்போது எங்களிடம் 4 மருத்துவர்கள் மற்றும் 20 மருத்துவ ஊழியர்கள் உள்ளனர்.
எதிர்காலத்தில் படுக்கை வசதிகளை 250 ஆக அதிகரிக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. முன்னெப்போதையும் காட்டிலும் தற்போதுள்ள மோசமான சூழ்நிலையில் இந்த வசதிகள் ஏழை, எளியோரை அடைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
சுகாதாரத்துறையில் 100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள எங்களது ஒமேகா சீக்கி மொபைலிட்டி, எதிர்காலத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் ஆலை மற்றும் கோவிட் சோதனை வசதியையும் அமைக்கவுள்ளது என தெரிவித்தார்.
இந்த இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை மட்டுமின்றி ஒமேகா சீக்கி நிறுவனம் அதன் ராஜ்+ எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களில் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களுக்காக நகரும் ஆக்ஸிஜன் முகாம்களையும் அமைத்து வருகிறது. இதற்காக இந்த வாகனங்களில் ஒரே நேரத்தில் 25ல் இருந்து 30 பேருக்கு ஆக்ஸிஜன் வழங்க உதவியாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இவற்றுடன் கொரோனா சோதனைகளுக்காக மூலக்கூறு ஆய்வகங்களையும் ஜெனிக்ஸ் சத்யா ஆய்வகங்களுடன் இணைந்து திறக்க ஒமேகா சீக்கி மொபைலிட்டி தயாராகி வருகிறது. இத்தகைய பெரிய பெரிய விஷயங்களுடன் தனது எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், தேவைப்படுவோருக்கு உணவுகளையும் இந்த நிறுவனம் டெலிவிரி செய்து வருகிறது.
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!