Just In
- 49 min ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 1 hr ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 3 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 4 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
8 பைலட்டுகள் மட்டுமே இந்த விமான ஓடுபாதையில் விமானத்தை இயக்கலாமாம்!
விமானங்களை தரை இறக்குவதும், மேலே ஏற்றுவதும்தான் பைலட்டுகளின் மிக சவாலான பணியாக கருதப்படுகிறது. ஆனால், சாதாரண விமான ஓடுபாதைகள் போல இல்லாமல், பூகோள அமைப்பின்படி மிக சவாலான ஓடுபாதைகள் உலகின் பல இடங்களில் உள்ளது.
அப்படி, சவாலானதும், அபாயகரமான பூகோள அமைப்பில் உள்ள விமான நிலையங்களில் ஒன்று இமயமலை பிரதேசத்தில் அமைந்திருக்கும் நமது அண்டை நாடான பூட்டானில் உள்ள பாரோ விமான நிலையம். ஆம், இந்த அபாயகரமான விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதும், ஏற்றுவதும் மிக சவாலான காரியமாக இருக்கிறது.
அமைப்பு அப்படி
இந்த விமான நிலையம் பாரோ நகரிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பாரோ சூ ஆற்றின் கரையில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. அதாவது, 18,000 அடி உயரமுடைய மலைகள் சூழ்ந்த பிரதேசத்தின் மத்தியில் உள்ளது.
Picture credit: keyword-suggestions
கால நிலை
பகல் நேரத்தில் மட்டுமே இந்த விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்கவும், டேக் ஆஃப் செய்யவும் முடியும். கால நிலை சரியில்லாத நேரத்தில் அனுமதி கிடையாது.
Picture credit: Doug Knuth/Wiki Commons
ஓடுபாதை நீளம்
இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை 6,500 அடி நீளம் கொண்டது. இந்த குறைவான நீளத்திற்குள் தரையிறங்கவும், ஏறவும் தகுதியுடைய விமானங்களை மட்டுமே இயக்க முடியும்.
Picture credit: Youtube/Wiki Commons
அனுமதி
உயரமான மலைப்பகுதிகளை எளிதாக வளைந்து நெளிந்து பறக்கும் சிறப்புகளை உடைய விமானங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அதேபோன்று, மலைப்பாங்கான இந்த பகுதியில் எளிதாக பறக்கும் சிறப்பம்சங்களையும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அத்துடன், செங்குத்தாக தரையிறங்கும் அம்சத்தையும் பெற்றிருக்கும் விமானங்களை மட்டுமே இங்கு இயக்க முடியும்.
எரிபொருள்
கொல்கத்தாவிலிருந்து பாரோ விமான நிலையத்திற்கு விமானம் இயக்க முடியும். பாரோ விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான வசதி இல்லை. எனவே, ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் கொல்கத்தாவிலிருந்து பாரோ வரை சென்று, அங்கிருந்து மீண்டும் திரும்பி வர வேண்டும். எனவே, 1,200 கிமீ தூரம் பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.
Picture credit: Göran Höglund/Wiki Commons
இந்திய அரசு உதவி
சிறிய ரக விமானங்களுக்கு பதிலாக நடுத்தர வகை விமானங்களை இயக்குவதற்கான கட்டமைப்புடன், பாரோ விமான நிலையத்தை மேம்படுத்த இந்திய அரசு உதவி செய்தது. இதையடுத்து, 1988ம் ஆண்டிலிருந்து ஏர்பஸ் ஏ319-100 விமானத்தின் சேவை துவங்கியது. பூட்டான் நாட்டின் Druk Air நிறுவனம்தான் இந்த சேவையை நடத்தி வருகிறது.
Picture credit: Thomas Wanhoff/Wiki Commons
அனுபவமிக்க பைல்ட்டுகள்
இந்த விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களை விசேஷ பயிற்சியும், நல்ல அனுபவமும் கொண்ட பைலட்டுகள் இயக்க முடியும். உலகிலேயே 8 பைலட்டுகள் மட்டுமே இந்த விமான நிலையத்திற்கு விமானத்தை இயக்குவதறகு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலா
இந்த விமான நிலையம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இமயமலையின் அழகையும், வனப்பையும் காண்பதற்காகவே, இங்கு பல்லாயிரணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
மகிழ்ச்சியான நாடு
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக பூட்டான் கருதப்படுகிறது. குறிப்பாக, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லையாம்.
உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகள்: தொகுப்பு
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!