Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"ஆக்சிஜன் பற்றா குறையால் இனி ஒரு உயிர்கூட போக கூடாது" -பேருந்துகளையே ஆக்சிஜன் மையமாக மாற்றிய எடியூரப்பா!
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் பேருந்துகளையே ஆக்சிஜன் மையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இதனால், எண்ணற்ற உயிர்கள் தினந்தோறும் பரிதாபமாக பலியாகி வருகின்றன. இந்தியாவின் இந்த இக்கட்டான நிலையைக் கருத்தில் உலக நாடுகள் பல உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
கப்பல் மற்றும் விமானங்களின் வாயிலாக மருத்துவ ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா ஆக்சிஜன் பேருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றார்.
அதாவது, பொது பேருந்துகளை தற்காலிகமாக ஆக்சிஜன் மையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் இருக்கும் இருக்கைகள் நீக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.
இத்துடன், நோயாளிகள் வசதியாக அமர்ந்துக் கொள்ளும்படி இருக்கைகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய பேருந்துகளையே அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூருவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார்.
இதுகுறித்து ஆக்சிஜன் சிலிண்டர் பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தபோது பேசிய எடியூரப்பா, "கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் நாட்டில் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிர் பலிகள் மாநிலத்திற்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கின்றது" என்றார்.
மேலும் பேசிய அவர், "இனி இத்தகைய துற்சம்பவங்கள் மாநிலத்தில் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்து சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது" என்றார். தொடர்ந்து, மருத்துவமனைகளுக்கு வெளியே ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற இப்பேருந்துகள் நிச்சயம் உதவும்" என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தற்போது முதற் கட்டமாக இருபது பேருந்துகள் ஆக்சிஜன் வசதியுடன் மாற்றப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் முக்கியமான மருத்துவமனைகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு பஸ்ஸிலும் சுமார் 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அடங்கிய இருக்கை வசதிக் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுடையவர்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாக ஆக்சிஜன் மாறியிருக்கின்றது. ஆனால், தேவையைக் காட்டிலும் உற்பத்தி மிகக் குறைவாகவே நமது நாட்டில் காணப்படுகின்றது. இதன் விளைவாக ஆம்புலன்ஸ், வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை ஆகியவற்றின் தட்டுப்பாடுகளுடன் ஆக்சிஜனும் இணைந்திருக்கின்றது.
இந்த தட்டுப்பாட்டை ஒழிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மக்களின் உயிரைக் காக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.